Don't Miss!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- News நாளை வாக்குப்பதிவு நடைபெறும் 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகள் இதுதான்! முழுவிவரம்
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Automobiles இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கண்ணீரில் ஜனனி, ஐஸ், யாஹ்சிகா.. அப்போ இந்த வார எலிமினேசன் ‘இவர்’ தானா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற இருக்கிறார்.
சென்னை : பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மஹத் அல்லது ஷாரிக் வெளியேற்றப் படுவார்கள் எனத் தெரிகிறது.
பிக் பாஸ் சீசன் 2 தொடங்கி ஏழு வாரங்கள் ஆகி விட்டது. ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவ்வளவாக சர்ச்சையில் சிக்காதவர்கள். அதனால் அவர்களது வெளியேற்றம் அவ்வளவாகப் பரபரப்பை ஏற்படுத்தவில்லை.
ஆனால், கடந்த வாரம் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவருமே முக்கியமானவர்கள். எனவே, கடந்த வாரமே எவிக்சன் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
தனிமைச் சிறை:
ஆனால், வைஷ்ணவியை வெளியேற்றுவது போல் நாடகமாடி விட்டு, பிக் பாஸ் வீட்டிலேயே ரகசிய அறையில் அவர் தங்க வைக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்த அவர், தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
ரித்விகா சேஃப்:
இந்நிலையில், இந்த வார எவிக்சனும் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. காரணம் மும்தாஜ், பொன்னம்பலம், பாலாஜி, ஷாரிக், மஹத் மற்றும் ரித்விகா என ஆறு பேர் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ரித்விகாவை நேற்றே கமல் காப்பாற்றி விட்டார்.
மும்தாஜ்:
எனவே, மீதமுள்ளவர்களில் இன்று யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து பொன்னம்பலமும், மும்தாஜும் தொடர்ந்து சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர்களை பிக் பாஸும், மக்களும் சேர்ந்து காப்பாற்றி வருகின்றனர்.
அழும் ஜனனி:
இந்த சூழ்நிலையில் எவிக்சன் தொடர்பாக இன்று விஜய் டிவியில் வெளியாகியுள்ள புரோமோவில், ‘புலி நிஜமாகவே இங்கு வருகிறது' என்கிறார் கமல். அவர் கூறியதைக் கேட்டு ஜனனி, யாஷிகா, மும்தாஜ் மற்றும் ஐஸ் ஆகியோர் அழுகின்றனர். இதைப் பார்க்கும் போது ஷாரிக் அல்லது மஹத், இவர்களில் ஒருவர் தான் இன்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார்கள் எனத் தெரிகிறது.
சாத்தியமில்லை:
நேற்று முன் தினம் தான் வீட்டின் தலைவராகி இருக்கிறார் ஷாரிக். அடுத்தவாரம் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது பிக் பாஸ் உத்தரவு. அப்படி இருக்கையில் அவரை நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேற்றுவது சாத்தியமில்லை.
எதிர்பார்ப்பு:
ஆனால், நட்சத்திர குடும்பத்தில் இருந்து வந்துள்ள ஷாரிக், தொடர்ந்து குடும்பப் பெயரை கெடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பிக் பாஸ் வீட்டில் மட்டுமல்ல, மக்களிடையேயும் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. எனவே, மேலும் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் அவர் வீட்டை வெளியேறலாம் என நம்பப்படுகிறது.
அந்தப் புலி மஹத்தா?
இது ஒருபுறம் இருக்க, மஹத் தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப் படுகிறார் என்கிறார்கள் சிலர். காரணம் மஹத் என்பதால் தான் ஜனனியிடம் இந்த அதிர்ச்சி என்பது அவர்களது வாதம். அதோடு, வெளிச்சத்தில் உஷாராக இருக்கும் மஹத், பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்குவதில்லை. கமல் கூறியது போன்ற இருட்டில் நடக்கும் சில்மிசங்களை பிக் பாஸால் குறும்படமாக ஒளிபரப்பவும் முடியாது. எனவே, அவர் தான் இன்று வெளியேற்றப் படுவார் என்கிறார்கள்.