Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிக்பாஸ் 2: ரைசாவின் கோபத்திற்கு ஆளான ‘அந்த’ நாய் இந்த சீசன்லயும் இருக்காம் பாஸ்!
பிக்பாஸ் சீசன்2விலும் தூங்குபவர்களை எழுப்ப நாயின் குரல் ஒலிக்குமாம்.
சென்னை: பிக்பாஸ் சீசன் 2விலும் பகலில் தூங்கும் போட்டியாளர்களை எழுப்ப நாயின் குரைப்பு சத்தம் கேட்குமாம்.
பிக்பாஸ் சீசன் 2 நாளை முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் கலந்து கொள்ளப் போகிறவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், போட்டியாளர்களுக்கு இணையாக பிக்பாஸ் வீட்டில் ஒரு அங்கமாக இருப்பது ஒரு நாய். கடந்த சீசனிலேயே பகலில் தூங்குபவர்களை எழுப்பி விடும் வேலையை அந்த நாய் பார்த்தது.
இதற்காக ரைசா உள்ளிட்டவர்களிடம் வசமாக வாங்கிக் கட்டியும் கொண்டது.
கண்டபடி திட்டு:
இதனால், ரைசா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது, அவர் திட்டியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக, நாய் பொம்மை ஒன்றை ஸ்ரெட்சரில் தூக்கி வந்து காமெடி செய்தார்கள். அந்தளவில் கண்டபடி ரைசாவிடம் அந்த நாய் கடந்தமுறை திட்டு வாங்கியது.
பகல் தூக்கம்:
இந்நிலையில், சீசன் 2விலும் அதே வேலையை கண்ணும் கருத்துமாக செய்ய அதே நாய் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாம். நிச்சயம் பகலில் தூங்கும் போட்டியாளர்களை அது குரைத்து குரைத்து எழுப்பும் என்பது உறுதி.
காவலாளி:
பகலில் தூங்கும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வேண்டுமானால் அந்த நாயின் குரல் நாராசமாக இருந்திருக்கலாம். ஆனால், பார்வையாளர்களுக்கோ விடாமல் குரைத்து தூங்கும் போட்டியாளர்களை நான்ஸ்டாப் டிஸ்டர்ப் செய்த அந்த நாயின் குரல் மிகவும் பிடித்திருந்தது. இதனால், அந்த வீட்டின் கண்ணுக்குத் தெரியாத காவலாளியாகவே முதல் சீசனில் அந்த நாய் இருந்தது.
மகிழ்ச்சி:
தற்போது இரண்டாவது சீசனிலும் அந்த நாய் இருக்கப்போவது போட்டியாளர்களை வேண்டுமானால் எரிச்சலடைய வைத்திருக்கலாம். ஆனால் பார்வையாளர்களுக்கு இந்தத் தகவல் நிச்சயம் மகிழ்ச்சியையே தந்திருக்கும்.