Don't Miss!
- News ‛‛பானை சின்னம் கிடையாது’’.. உறுதியான கூறிய தேர்தல் ஆணையம்.. திருமாவின் விடுதலை சிறுத்தைகள் ஷாக்
- Sports எங்களை ஏமாற்ற பார்க்காதீங்க! நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி.. GT போட்டியில் நடந்தது என்ன?
- Lifestyle உங்க தலையணை இந்த மாதிரி இருந்தா நீங்க தலைவலி முதல் பல ஆபத்தான பிரச்சினைகள் வரை சந்திக்க வேண்டியிருக்குமாம்...!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவதுகூட முட்டாள்தனம் - ரகுராம் ராஜன்
- Automobiles 6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நகைக் கடை நகைகளை திருப்பிக் கொடுக்காமல் லவட்டிக் கொண்டாரா இந்த பிக் பாஸ் நடிகை!
இந்தி நடிகை ஹினா கான் நகை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
Recommended Video
மும்பை: இந்தி தொலைக்காட்சி தொடர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளவர் ஹினா கான். இந்தி பிக்பாஸ் சீசன் பதினொன்றில் பங்கேற்று பிரபலமானவர்.
இவருடைய ட்ரெஸிங் ஸ்டைலுக்காக பிக்பாஸ் ரசிகர்களிடையே பாராட்டுகளை குவித்தார். அதன்பிறகு அவ்வப்போது வித்தியாசாமான ஆடைகளை அணிந்து புகைப்படங்களை ஷேர் செய்வார். சமீபத்தில் இவர் அணிந்திருந்த வித்தியாசமா ஆடைக்காக கிண்டலுக்கு உள்ளானார்.
இப்போது ஒரு நகைக்கடையில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடிப்பதற்காக அணிந்த நகையை திருப்பி தரவில்லை என புகார் எழுந்துள்ளது. விளம்பர படப்பிடிப்புக்காக ஹினாகானின் ஸ்டைலிஸ்ட் ஹேமலதா நகைக்கடையிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்து வந்ததாகவும், படப்பிடிப்பு முடிந்த பிறகு அதை திருப்பி தரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஹினா கான் இதை மறுத்துள்ளார். அவர் அந்த நகையை அணியவில்லை என்றும், அதற்கு பதிலாக வேறு ஒரு நகைகைத்தான் அணிந்ததாக தெரிவித்துள்ளார். அவர்கள் சொல்லும் அந்த நகையை ஸ்டைலிஸ் ஹேமலதாவின் உதவியாளர் தவறுதலாக ஆட்டோவில் தவற விட்டதாகவும், அதற்காக 2.8 லட்ச ரூபாயை அவர் திருப்பி செலுத்திவிட்டார் என்றும் விளக்கமளித்துள்ளார்.
மேலும் தன்னை இழிவுபடுத்துவதற்காக திட்டமிடப்பட்ட சதி என்றும், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இன்னும் 15 நாட்களுக்குள் நகையை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என மும்பையைச் சேர்ந்த ஆர்.கே.எஸ் அஸ்ஸோசியேட்ஸ் நிறுவனம் முலம் நகைக்கடை சார்பில் ஹினா கானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
LOL🤣🤣🤣wonder why this legal notice did not reach my house and instead reached all the media houses..😂👏👏 sorry haters this tactic will not work.. try something new.. bhassodi will still shine #Bhasoodi #NoMoreBullshit #BhasoodiHits7M https://t.co/BtZQ7jfSB8
— HINA KHAN (@eyehinakhan) July 18, 2018
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஹினா கான், தனக்கு எந்த ஒரு நோட்டீஸ் வராமல் மீடியாக்களுக்கு சென்றது ஏன்? புதிதாக எதாவது முயற்சி செய்யுங்கள் இது சரிப்பட்டு வராது என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.