Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிக்பாஸ் 2 : தண்ணீரைத் தொடர்ந்து போட்டியாளர்களை கண்ணீரில் தள்ளிய டாஸ்க்!
பிக்பாஸின் புதிய அறிவிப்பால் போட்டியாளர்கள் தங்களுக்கு பிரியமானவர்களை நினைத்து கண்ணீர் சிந்தினர்.
சென்னை: தண்ணீர் டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களைப் பாடாய் படுத்திய பிக்பாஸ், நேற்று கண்ணீர் டாஸ்க் கொடுத்து அவர்களை கதற வைத்தார்.
இந்த வாரம் பிக்பாஸில் அனைத்து போட்டியாளர்களுக்கு தண்ணீரில் கண்டம் என்றொரு டாஸ்க் தரப்பட்டது. போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தங்கள் டேங்க்கில் உள்ள தண்ணீரை குறையாமல், அதிகப்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் பிக்பாஸ்.
அன்புடன்:
அதாவது, ‘கடந்த மூன்று வாரங்களாக உங்கள் உறவுகளையும் நட்புகளையும் பிரிந்து பிக்பாஸ் வீட்டில் பயணித்து வருகிறீர்கள். அவர்களில் எவர் மீது அதிகமான பிரிவுத்துயரை அடைகிறீர்கள் என்பதையும் அவர்களுக்கு சொல்ல விரும்பும் அன்புத்தகவல் என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். அந்த தகவல் கோல்டன் பெட்டியில் வைத்து ஆர்ட்டின் வடிவ பொம்மையுடன் சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி வைக்கப்படும்' என்பது தான் அது.
பெற்றோர் :
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பலரும், தங்கள் பிரியமானவர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் அழுது கொண்டே பேசினர். நித்யாவும், பாலாஜியும் தங்கள் மகள் குறித்துப் பேசினர். மற்றவர்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோர் பற்றியே பேசினர்.
உருக்கமாகப் பேசிய டேனி:
பிக்பாஸ் நினைத்தது போலவே, தண்ணீர் டாஸ்க் மற்றும் இன்னபிற காரணங்களால் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாகிய போட்டியாளர்கள் மத்தியில், மீண்டும் ஒரு பாசப்பிணைப்பை உருவாக்க இந்தப் பகுதி மிகவும் உபயோகமானதாக இருந்தது. குறிப்பாக அவர்களில் டேனி, ரித்விகா, நித்யா உள்ளிட்டோரின் பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது.
சென்றாயன்:
பாத்திரம் தொடர்பாக காலையில் சென்றாயனிடம் ஆக்ரோஷமாக சண்டை போட்ட மஹத், இந்தப் பகுதி முடிந்ததும் ‘மன்னிச்சிர்ரா சென்றயான்' என்று தானாக முன்வந்து சொன்னது இதற்கு ஒரு உதாரணம்.