Don't Miss!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரம்யா, நித்யா, அனந்த், மமதி: ஒரு ஒற்றுமை இருப்பதை பார்த்தீங்களா?
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்பவர்களுக்கு இடையே ஒரு ஒற்றுமை உள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி போர் அடிக்கிறது என்று சொல்லி சொல்லியே பார்வையாளர்கள் டயர்டாகிவிட்டார்கள். நிகழ்ச்சி எப்படா முடியும் என்று பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் புலம்புகிறார்கள்.
இந்நிலையில் பார்வையாளர்கள் மட்டும் அல்ல போட்டியாளர்களுக்கும் போர் அடித்துவிட்டது தெரிகிறது.
ரம்யா
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட ரம்யா அப்பாடா விட்டா போதும்டா சாமி என்ற ரேஞ்சில் மகிழ்ச்சியாக சென்றுவிட்டார். எனக்கு போக வேண்டும் என்று ஆசை என ரம்யா கூறியதும் அவரை வெளியே வருமாறு அழைத்தார் கமல். கமல் கையில் உள்ள கார்டில் தனது பெயரை பார்த்த ரம்யா ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறி சிரித்தார். அவர் சிரிப்பு பொய் அல்ல.
போட்டியாளர்கள்
சண்டையை பார்த்தால் அங்கிருந்து ஓடிப் போக வேண்டும் என்று நினைப்பவள் நான். அதனால் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று இருந்தது.
இந்த வீட்டில் நிறைய பொய், போலி இருக்கிறது. இது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் ரம்யா. அவர் கிளம்பியதால் மும்தாஜ், வைஷ்ணவி, ஜனனி உள்ளிட்ட சக போட்டியாளர்கள் தான் அழுதார்கள். ரம்யா கடைசி வரை அழவில்லை.
நித்யா
ரம்யா மட்டும் அல்ல மமதி சாரி, அனந்த் வைத்தியநாதன், நித்யா ஆகியோரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றபோது மகிழ்ச்சியாக சென்றார்கள். இது பெரிய வாய்ப்பு அப்படி இப்படி பேசினாலும் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்ற எண்ணமே அவர்களிடம் மேலோங்கி இருந்தது.
கதவுகள்
பார்வையாளர்கள் நிகழ்ச்சி எப்படா முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள், போட்டியாளர்களோ பிக் பாஸ் வீட்டின் கதவு திறந்து நாம் என்று நம் வீட்டிற்கு செல்வோம் என்று காத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல போட்டியாளர்களுக்கும் போர் அடிக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஏதேதோ செய்து பார்க்கிறார்கள். ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.