Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த நேரம் பார்த்து பிக் பாஸ் வீட்டில் மாட்டிக்கிட்டோமே: போட்டியாளர்கள் வருத்தம்
சென்னை: இந்த நேரம் பார்த்து வெளியே இல்லாமல் போய்விட்டோமே என்று பிக் பாஸ் போட்டியாளர்கள் வருத்தப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ் 2 வீட்டில் நேற்றைய டாஸ்கில் ஆளாளுக்கு பேசிப் பேசி சாகடித்தனர். அப்போது திமுக தலைவர் கருணாநிதி இறந்த செய்தி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
அழுகை
மவுன அஞ்சலி செலுத்தியபோதே மகத்திற்கு அழுகை வந்துவிட்டது. என் நண்பர் அவர் தாத்தா கருணாநிதியை நினைத்து அழுவாரே, இந்நேரம் எனக்கு அங்கு இருக்க வேண்டும் போல் உள்ளதே. கருணாநிதி ஒரு லெஜன்ட், நாட்டின் மூத்த அரசியல் தலைவர், அவரை போன்று யாருமே இல்லை என்று கூறி ஃபீல் பண்ணினார் மகத். கருணாநிதிக்காக கலங்கியபோது தான் மகத்தை பார்த்த மக்களுக்கு அவர் மீது ஒரு பரிவு ஏற்பட்டது.
வருத்தம்
இந்நேரம் பார்த்து வெளியே இல்லாமல் போய்விட்டோமே என்று தோன்றுகிறது என்று ஜனனி தெரிவித்தார். கவலைப்பட்ட மகத்தை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார் வைஷ்ணவி. வெளியே ரணகளமாக இருக்குமே, வேற மாதிரி இருக்குமே என்று கூறினார் பாலாஜி. பார்த்தீங்களா போன வருஷம் அம்மா இறந்தாங்க, இந்த வருஷம் கலைஞர் என்றார் ஜனனி.
மருத்துவமனை
கருணாநிதிக்கு உடம்புக்கு முடியாமல் மருத்துவமனையில் அனுமதித்து இறந்திருக்கலாம் என்றார் பாலாஜி. போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றபோது கருணாநிதி நலமாக இருந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த விஷயம் அவர்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி முடியாமல் தான் இருந்தார், அவருக்கு 98 வயது என்ற மகத்தை இல்லடா 94, 95 என்று ஆளாளுக்கு ஒரு வயதை கூறி இறுதியில் 94 வயது என்று ஒரு முடிவுக்கு வந்தனர்.
தமிழன்
தாத்தா என்று நாம் உரிமையோடு கூப்பிடக்கூடிய பச்சைத் தமிழன் நம் கலைஞர் ஐயாவாக தான் இருக்க முடியும். அவர் இறந்துவிட்டார் என்று கேட்டு எனக்கு உடல் நடுங்குகிறது. தமிழக மக்களே என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் நான் கட்டுமரமாக வந்து கை கொடுப்பேன் என்று அவர் உணர்வுப்பூர்வமாக கூறினார். அவருடைய பலமே பேனாவும், மையும் தான் என்றார் டேனி.
தயாநிதி அழகிரி
நான் கருணாநிதி அவர்களின் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருந்துள்ளேன். தயாநிதி அழகிரி என் உயிர் நண்பன். துரை உண்மையாக அங்கே இருக்க முடியவில்லை என்று கஷ்டமாக இருக்கிறது. நீ தைரியமாக இரு. தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்த ஆள் அவர். மூத்த அரசியல் தலைவர் அவர் தான். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று கூறி கலங்கினார் மகத்.