அய்யோ, மிஸ் ஆகிடுச்சே: பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து மக்கள் கவலை
Recommended Video

சென்னை: நேற்று மும்தாஜ் சொன்ன வார்த்தையை கேட்டு தான் பார்வையாளர்கள் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் மகத் மீது செம கடுப்பில் உள்ளனர். திரும்பும் பக்கம் எல்லாம் கேமராக்கள் இருப்பது தெரிந்து இந்த மகத் இப்படி வெட்கம் இல்லாமல் நடந்து கொள்கிறாரே என்று பலரும் திட்டுகிறார்கள்.
எப்பொழுது பார்த்தாலும் யாஷிகா அல்லது ஐஸ்வர்யாவுடன் உரசிக் கொண்டே இருக்கிறார் மகத்.

மும்தாஜ்
இந்த மாதிரி டோனில் என்னிடம் பேசாதீங்க, மேனர்ஸ் இல்லாமல் பேசாதீங்க என்று நடுராத்திரியில் ஜனனியிடம் சீறினார் மும்தாஜ். இன்னைக்கு மகத் மட்டும் வாயை திறந்திருந்தான் வேறு மும்தாஜை பார்த்திருப்பான் என்று ரம்யாவிடம் கூறினார் மும்தாஜ். அய்யோ, மகத்துக்கு ஆப்பு வைக்கும் ஒரு சான்ஸ் மிஸ் ஆகிவிட்டதே என்று பார்வையாளர்கள் ஃபீல் பண்ணினார்கள்.

ஐஸ்வர்யா
காலையில் எழுந்த உடன் சிம்புவின் ஒஸ்தி படத்தில் வந்த கலாசலா பாட்டுக்கு யாஷிகா, ஐஸ்வர்யா போட்ட ஆட்டத்தை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் நீ நல்லா இருய்யா பிக் பாஸ் என்று வாழ்த்தினார்கள்.

புறம் பேசுதல்
ஜனனியும், மகத்தும் சேர்ந்து மும்தாஜை பற்றி புறம் பேசினார்கள். மும்தாஜ் கடுப்பானால் அதை பார்த்து சந்தோஷப்படுகிறார் ஜனனி. அதன் பிறகு தண்ணீர் டாஸ்க் மீண்டும் துவங்கிவிட்டது. டேங்கில் இருந்து தண்ணீர் வெளியே போகாமல் இருக்க முட்டுக் கொடுக்கத் துவங்கினர்.

பாசம்
மும்தாஜ் பாசமாக மகத்துக்கு தண்ணீரை வாயில் ஊற்றிவிட்டார். அதற்கும் ஆஹா, என்ன சுகம் என்கிறார் மகத். பிக் பாஸ் வீட்டில் மகத் பாடிய பாடலை கேட்டு பார்வையாளர்கள் எரிச்சல் அடைந்தனர். மகத் தயவு செய்து இனிமேல் பாடாதீங்க. எங்களால் கேட்க முடியல, கொடூரமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











