Don't Miss!
- News வில்லங்க சான்றிதழ்.. வீடு, மனை வாங்கறீங்களா? பத்திரப் பதிவுத்துறை சர்ப்ரைஸ்.. இனி லேட்டாகாது.. சபாஷ்
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
“நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும்”.. முகெனை இப்டி அசிங்கப்பட வச்சிட்டீங்களே அபி!
பிக் பாஸ் வீட்டில் மறுபடியும் ஒரு காதல் நாடகம் ஆரம்பமாகியுள்ளது.
சென்னை: பிக் பாஸ் போட்டியாளர் அபிராமி, சக போட்டியாளரான முகெனிடம் திரும்பவும் தனது காதலை சொல்லியிருக்கிறார்.
இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே பிக் பாஸ் வீட்டில் பல காதல் நாடகங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த வாரம் வரை கவின், லாஸ்லியா, சாக்ஷி இடையேயான முக்கோண காதல் கதை தான் வீட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது.
இந்த காதலால் பிக் பாஸ் வீடே இரண்டானது. லாஸ்லியாவுக்கும், சாக்ஷிக்கும் இடையே சக்களத்தி சண்டையே நடந்தது. ஒருபக்கம் சாக்ஷி அழுது புலம்ப, மறுபக்கம் கவின் சாக்ஷிக்கு கவுன்டர் கொடுக்க, இன்னொரு பக்கம் லாஸ்லியா கோவித்துக்கொள்ள என முக்கோண காதல் கதை பரபரப்பான கட்டத்தை எட்டியது.
அம்மா அபி.. பிக்பாஸ் வீட்டுல இன்னும் 3 பேர் மிச்சமிருக்காங்க! அவங்கக்கிட்ட எப்போ சொல்லப்போறீங்க?
மீண்டும் நண்பர்கள்:
திடீரென அந்த காதல் க்ளைமாக்சே இல்லாமல் பாதியில் அறுந்து போனது. இப்போது பிக் பாஸ் வீட்டில், சாக்ஷியும் கவினும் பேசிக்கொள்வதே இல்லை. அதேவேளையில் லாஸ்லியா, கவின் உறவில் எந்த பாதிப்பும் இல்லை. இப்போதைக்கு இருவரும் நண்பர்கள் மட்டுமே எனச் சொல்லி பழகி வருகின்றனர்.
பழைய ரூட்டு:
இதற்கிடையே சரவணன் வெளியேற்றத்தால் காதல் பிரச்சினை திசை திருப்பப்பட்டது. இரண்டு நாட்களாக அதை பற்றி தான் ஊரெங்கும் பேச்சாக இருந்தது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இமேஜுக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதை உணர்ந்த பிக் பாஸ் தற்போது பழைய ரூட்டுக்கே திரும்பியிருக்கிறார்.
அபி-முகென்:
தற்போது பிக் பாஸ் வீட்டில் அபிக்கும், முகெனுக்கும் இடையேயான நட்பு அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தனை நாட்கள் அபியை தோழியாக நினைத்து மட்டுமே பழகி வருகிறார் முகென். இரு தினங்களுக்கு முன்பு சாக்ஷி லேசாக சிண்டு முடிந்துவிட்ட போது, முகெனுக்கும், அபிராமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
முகென் கோபம்:
அபி அழுது புலம்பியதால் கோபப்பட்ட முகென், கட்டிலை கையால் குத்தி உடைத்தார். அதன் பின்னர் அபிக்கு அட்வைஸ் செய்த முகென், தங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டுமே என எடுத்துரைத்தார். வெளியில் தனக்காக ஒரு பெண் காத்துக்கொண்டிருப்பதாகக் கூறிய முகென், அவரை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது என திட்டவட்டமாகக் கூறினார். அப்போது தலையை ஆட்டிய அபி, மீண்டும் தனது காதல் உணர்ச்சிகளை கொட்டத் தொடங்கியிருக்கிறார்.
திரும்பவுமா?
காலை வெளியான இரண்டாவது புரொமோவில், முகெனிடன் அபி "ஐ லவ் யூ " சொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அதை முகென் உடனடியாக ஏற்பதாக தெரியவில்லை. போன வாரம் போல் இந்த வாரமும் ஒரு காதல் நாடகத்தை அரங்கேற்றி நிகழ்ச்சியை ஓட்ட பிக் பாஸ் முடிவு செய்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
|
கவின் ஆர்மி:
கவின் காதல் பிரச்சினையில் சிக்கி இருந்தபோது, சமூகவலைதளங்களில் தர்ஷன் மற்றும் முகெனின் ஆர்மியினர் பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டு கலாய்த்து வந்தனர். தற்போது முகெனும் காதல் பிரச்சினையில் சிக்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளதால், கவின் ரசிகரான இவர் சந்தோசமாக இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.