Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ச்சே.. நிஜத்தில் சாண்டி இவ்வளவு மோசமானவரா... மனைவியை இப்படியெல்லாம் கொடுமை படுத்தினாரா?
நிஜத்தில் தான் எப்படியெல்லாம் இருந்தேன் என சாண்டி கூறியுள்ளார்.
சென்னை: பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடன இயக்குனர் சாண்டி, முன்பு தான் எப்படியெல்லாம் சுயநலவாதியாக இருந்தேன் என கூறியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், ஜாலியாக சுற்றி வருபவர் சாண்டி மாஸ்டர். அதன் காரணமாகவே ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் அவர் டியராகி விட்டார்.
இந்த சீசனின் டைட்டில் வின்னர் என கணிக்கப்படுபவர்களின் பட்டியலில் முதல் பெயர் சாண்டி தான். அதற்கு அடுத்து தான் லாஸ்லியா, சேரன் எல்லாம் இருக்கிறார்கள். காரணம் எப்போதும் தானும் ஜாலியாக இருந்து, மற்றவர்களையும் ஜாலியாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
அப்படி பேசாதீங்க அண்ணே.. அவமானப்படுத்தியபோதும் அன்பாக பேசிய சேரன்! இதுக்கே அவார்டு கொடுக்கலாம்!
சாண்டி பதில்:
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் மொட்டக் கடிதாசி டாஸ்க் மூலம் தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தினார் சாண்டி. டான்ஸ் ஆடுவது, கலாய்ப்பதை தவிர்த்து அவருக்கு உறவுகள் மீது உணர்வுகள் இருக்கிறதா என கேட்கப்பட்டது. அதற்கு சாண்டி சொன்ன பதில் தான் செம ஷாக்கிங்.
சாண்டியின் பழக்கம்:
சிறு வயதில் இருந்தே எந்த பிரச்சினையிலும் தலையிட மாட்டாராம் சாண்டி மாஸ்டர். அவருடைய அப்பா, அம்மா சண்டைப் போட்டுக்கொண்டு இருந்தால், என்ன ஏது என கேட்கமாட்டாராம். வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் வீடு தங்காமல் வெளியே சென்றுவிடுவாராம்.
சுயநலவாதி:
மனைவிக்கு எந்த வேலையும் செய்து கொடுக்கமாட்டாராம் சாண்டி. அவர் காய்கனிகள் வெட்டிக்கொண்டிருக்கும் போது காலால் டீப்பாயை தள்ளிவிடுவாராம். மேலும் அதிகமாக கோபப்படுவாராம். தனது சந்தோசம் மட்டுமே முக்கியம் என சுயநலவாதியாக இருப்பாராம். மற்றவர்களைக் காயப்படுத்தும்படி தான் பேசுவாராம்.
மனைவியுடன் சண்டை:
ஒருமுறை அதிக கோபத்துடன் மனைவியை திட்டி விட்டாராம். இதனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிட்டதாம். அதாவது, கோபப்பட்டு பேசினால் சாண்டியின் மனைவிக்கு மூக்கில் ரத்தம் வர ஆரம்பித்து விடுமாம். அன்றைய தினம் ஒரு துண்டு நனையும் அளவுக்கு நிற்காமல் ரத்தம் வந்து கொண்டே இருந்ததாம். அப்போது அவரது செல்ல மகள் கைக்குழந்தையாம். இந்த சூழ்நிலையில் மனைவியை இப்படி காயப் படுத்தி விட்டோமே என்று மிகவும் வருத்தப்பட்டாராம்.
மனம் மாறிய சாண்டி:
அன்றைய தினத்தில் இருந்து தனது குடும்பத்துக்காக வாழ ஆரம்பித்து விட்டதாகவும், தற்போது பிக் பாஸ் வீட்டில் தான் வேலைகள் எல்லாம் செய்வதை பார்த்து தனது மனைவி நிச்சயம் சந்தோஷப்படுவார் என்றும் சாண்டி கூறினார். இதைக் கூறும் போது அவர் கண்கலங்கினார். எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்த சாண்டி மாஸ்டரையும் அழ வைத்து சாதனை படைத்துவிட்டார் பிக் பாஸ்.