கவினிடம் பொய் சொன்ன லாஸ்லியா: ஆதாரத்துடன் குட்டை உடைத்த நெட்டிசன்கள்
சென்னை: லாஸ்லியா சொன்னது சுத்தப் பொய் என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் லாஸ்லியாவுக்கு நேரம் சரியில்லை என்று தான் கூற வேண்டும். ஆரம்பத்தில் அவரை மிக்சர் மாமி என்று மட்டும் தான் பார்வையாளர்கள் கிண்டல் செய்தனர். ஆனால் தற்போது அவர் அடுத்தடுத்து சொல்லும் பொய்களால் அவரை பார்த்தாலே எரிச்சல் அடைகிறார்கள் பார்வையாளர்கள்.
லாஸ்லியா சொன்ன பொய்களை நெட்டிசன்கள் அம்பலப்படுத்திவிட்டனர்.
லாஸ்லியா
பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி கவின் கேட்டதற்கு, எனக்கு கேக் வெட்ட மாட்டாங்க, எனக்கு சரியான விருப்பம் வெட்டணும்னு, பெரிய பொண்ணுன்னு நினைப்பாங்க தங்கச்சிக்கு வெட்டுவாங்க எனக்கு சரியான கவலையாக இருக்கும் என்றார் லாஸ்லியா. இந்நிலையில் அவர் பிறந்தநாளின்போது கேக்குடன் இருக்கும் புகைப்படத்தை நெட்டிசன்கள் தேடிக் கண்டுபிடித்து இது என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
கவின்
லாஸ்லியா சொல்வது பொய் என்பதற்கு ஆதாரங்களை வெளியிடுகிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள். செய்வதை எல்லாம் செய்துவிட்டு கமல் ஹாஸன் ஏதாவது கேட்டால் நினைவு இல்லை, யோசிக்க நேரம் வேண்டும் என்று சமாளிப்பது ஏன் என்று கேட்கிறார்கள்.
கமல்
கமல் ஹாஸன் செமயாக நோஸ்கட் கொடுத்துக் கொண்டிருந்தபோது கூட லாஸ்லியா சிரித்து மழுப்பினார். வெட்கமே இல்லாமல் இப்படி சிரிக்கும் அளவுக்கு லாஸ்லிா லூஸா என்று கேட்கிறார்கள் பார்வையாளர்கள். வர, வர லாஸ்லியாவின் முகத்தை பார்த்தாலே எரிச்சலாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எரிச்சல்
கவின், லாஸ்லியாவை பார்த்தால் பார்வையாளர்கள் கடுப்பாகிறார்கள். சமூக வலைதளங்களில் லாஸ்லியாவை விளாசுகிறார்கள். அதை எல்லாம் பார்த்தால் இந்த புள்ள பாவம்யா என்று கூட சொல்லத் தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications











