Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிக் பாஸ் வீட்டில் சின்ராசை கையிலேயே புடிக்க முடியாது, இப்ப என்ன பண்றாரோ?
Recommended Video
சென்னை:எப்பவுமே முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்த மோகன் வைத்யா இப்பொழுது என்ன செய்கிறாரோ?
பிக் பாஸ் வீட்டில் சினேகன் கட்டிப்பிடி வைத்தியம் செய்ததை பார்த்தவர்கள் அவரை திட்டினார்கள். ஆனால் இந்த சீசனில் மோகன் வைத்யா பொசுக்கு பொசுக்குன்னு பெண் போட்டியாளர்களுக்கு முத்தம் கொடுத்ததை பார்த்த பிறகு சினேகன் எல்லாம் தங்கமாகத் தெரிகிறார் என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
அந்த மனிதர் முத்தம் கொடுத்ததை பார்த்து நடிகர் சதீஷ் எல்லாம் கடுப்பாகி ட்வீட் போட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மோகன் வைத்யா கிளம்பிய அன்று அனைத்து பெண் போட்டியாளர்களையும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார் என்று பார்வையாளர்கள் கூறியது போன்றே நடந்தது. என்ன மீரா மிதுனை மட்டும் விட்டுவிட்டார்.
ரன்னிங்'லே இருப்பாப்டி... சின்ராசா கையிலே புடிக்க முடியாது. இப்போ என்ன பண்றாரோ😢😢 pic.twitter.com/HsJgpXWLVh
— அழகர் (@Sherin_yatchi) July 22, 2019
பிக் பாஸ் வீட்டில் நிறைய பெண் போட்டியாளர்கள் இருந்தார்கள் அதனால் மோகன் வைத்யா எப்பொழுதுமே ஓடியோடி முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். தற்போது என்ன செய்கிறார் என்று தெரியவில்லையே என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் வீடு போன்று நினைத்துக் கொண்டு வெளியே எந்த பெண்ணையாவது டைட்டாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் என்றால் மோகன் வைத்யா மீது பாலியல் தொல்லை வழக்கு தொடர்ந்துவிடுவார்கள் என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பிக் பாஸ் வீட்டை விட்டு மோகன் வைத்யா கிளம்பியபோது முத்தம் முத்தமாக கொடுத்ததை பார்த்து நடிகர் சதீஷ் கடுப்பாகி போதும் போதும் என்று ட்வீட் செய்தார். அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, என்ன சார் உங்களால் முடியாததை அப்பா என்று சொல்லி அவர் செய்கிறாரா, நீங்கள் பல படங்களில் ஹீரோவாக நடித்தால் கூட மோகன் வைத்யா அளவுக்கு முத்தம் கொடுக்க முடியாது என்று கூறி கலாய்த்தனர்.
😘😘😘😘 அடங்கப்பா எத்தன...... போதும் போதும் list போயிகிட்டே இருக்கு.....
— Sathish (@actorsathish) July 21, 2019
பிக் பாஸ் குறித்து சதீஷ் எப்பொழுதுமே ட்விட்டரில் கருத்து தெரிவிப்பார் குறிப்பாக சுவாரஸ்யமாக ட்வீட் போடுவார். சீனியர் நடிகை ஸ்ரீப்ரியாவும் பிக் பாஸ் பற்றி ட்வீட் போடுவார். நிகழ்ச்சியை பார்த்தாலும் ஸ்ரீப்ரியாவின் ட்வீட்டை பார்க்கும் ஆவல் பலருக்கும் உண்டு. பிக் பாஸ் வீட்டில் நடப்பது குறித்து சரியாக கருத்து தெரிவிப்பார். ஆனால் என்னவோ இந்த சீசனில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை கண்டுகொள்ளவில்லை.
மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகள் இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஸ்ரீப்ரியா ட்வீட் போடவில்லை போன்று. நீங்கள் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்தால் நன்றாக இருக்கும் மேடம்.