Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காசு, பணம், துட்டு, மணி.. லாஸ்லியா கதறி அழ காரணமான கவினின் ‘அந்த 5 நாட்கள்’ மாஸ்டர்பிளான் இதுதான்!
கூடுதல் பணம் கிடைக்கிறது என்பதற்காக தான் கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் வெளியேறியதற்கு பின்னால் ஒரு பெரிய மாஸ்டர் பிளானே இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி 95 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை எட்டுயுள்ளது. கடந்த வாரம் சேரன் வெளியேறிய நிலையில் நேற்று வரை கவின், லாஸ்லியா, சாண்டி, தர்ஷன், முகென், ஷெரின் ஆகிய ஆறு பேர் தான் எஞ்சியிருந்தனர்.
இவர்களில் முகென் கோல்டன் டிக்கெட் பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டார். மீதமுள்ள ஐந்து பேரும் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.
என்னை பொறுத்தவரைக்கும் அவர்தான் டைட்டில் வின்னர்.. கவினை தூக்கி வைத்து ஆடும் பிக்பாஸ் பிரபலம்!
கவின் வெளியேற்றம்
இந்த நிலையில் அதிரடி திருப்பமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறி உள்ளார். பிக் பாஸ் கொடுத்த ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு கண்ணீர் மல்க வெளியேறிவிட்டார். அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது வீட்டில் உள்ளவர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி
லாஸ்லியா, சாண்டி ஆகிய இரண்டு பேரும் எவ்வளவோ சொல்லியும் கவின் கேட்கவில்லை. நிகழ்ச்சி முடிய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் கவினின் இந்த முடிவு ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியாக தான் இருந்தது. பொறுத்தது பொறுத்தார் இன்னும் ஐந்து நாட்கள் மட்டும் இருந்திருக்கக் கூடாதா என அவரது ஆர்மி கைய்ஸ் வருத்தப்பட்டனர்.
இது தான் மாஸ்டர் பிளான்
ஆனால் கவினின் மாஸ்டர் பிளானே அந்த ஐந்து நாட்களில் தான் அடங்கியிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஒப்பந்தப்படி கவினுக்கு பேசப்பட்ட சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரமாம். ஆக 95 நாட்களுக்கு அவர் ரூ.28.5 லட்சம் சம்பளம் அவருக்கு ஏற்கனவே உறுதியாகிவிட்டது. மீதமுள்ள 5 நாட்களுக்கு ரூ. 1.5 லட்சம் சேர்த்தால் மொத்தம் ரூ.30 லட்சம் தான் கிடைக்கும்.
கூடுதல் பணம்
ஆனால் பிக் பாஸ் கொடுக்கும் ஆஃபரை ஒத்துக்கொண்டால் கூடுதலாக ரூ.3.5 லட்சத்தோடு, 33.5 லட்சமாக அவரது சம்பளம் உயரும். பிக் பாஸ் வீட்டிற்கு கவின் வந்ததே கடன் பிரச்சினையினால் தான். ஏழு வாரங்கள் இருந்தால் தனது கடனை அடைத்துவிடுவேன் என்றார். அதாவது ரூ.15 லட்சம் ரூபாயை சம்பாதிக்க தான் அவர் பிக் பாஸ் போட்டிக்கு வந்தார்.
கேம் ஓவர்
இப்போது கவின் சம்பாதித்திருப்பது ரூ.30 லட்சத்துக்கு அதிகமான பணம். எனவே அவர் கடன் பிரச்சினையில் இருந்து தப்பிவிடுவார். இது தான் கவினின் மாஸ்டர் பிளான் என கூறப்படுகிறது. அதனால் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது, ‘இது போதும் என் கேம் முடிந்து விட்டது' என சூசகமாக கவின் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.