Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நம்ப வைத்து கழுத்தறுத்த பிக் பாஸ்.. லாஸ்லியாவுக்காக பலிகடா ஆக்கப்பட்ட தர்ஷன்.. ஷாக் தரும் பின்னணி!
தர்ஷன் தான் டைட்டில் வின்னர் என அவரை நம்ப வைத்து மோசம் செய்திருக்கிறார் பிக் பாஸ்.
Recommended Video
சென்னை: நிகழ்ச்சி ஆரம்பமானதில் இருந்து தர்ஷன் தான் டைட்டில் வின்னர் என நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறார் பிக் பாஸ். தற்போது நிகழ்ச்சியில் இருந்து அதிர்ச்சி தரும் வகையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்திற்கு வந்துவிட்டது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். அதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெறியேற்றப்பட்டு விட்டுவிட்டார். இதனால், முகென்,சாண்டி, லாஸ்லியா, ஷெரின் தான் பைனல்ஸ் போட்டியாளர்கள். இவர்களில் யார் டைட்டில் அடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் எகிறி கொண்டிருக்கிறது.
இதுக்கு எதுக்கு டிரெஸ்.. பிரா போடாமல் மார்பு தெரியும்படி வந்த நடிகை.. திணறும் இணையதளம்!
எவிக்டான தர்ஷன்
இது ஒருபுறம் இருக்க, இதுவரை டைட்டில் வின்னராக கருதப்பட்ட தர்ஷன் ஏன் எவிக்ட் ஆனார் என்ற ஆராய்ச்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கின்றன. தர்ஷன் வெளியேற்றத்துக்கு விஜய் டிவி.சொல்லும் காரணம் குறைந்த வாக்குகள் பெற்றார் என்பதே. இதிலும் மக்கள் மீது பழியை போட்டு தப்பித்திருக்கிறார்கள்.
இறுதி முடிவு
உண்மையில் பிக் பாஸ் போட்டியாளர்களில் தர்ஷன், சாண்டி, முகென் ஆகிய மூன்று பேருக்கு தான் மக்கள் ஆரதவு அதிகம். ஆனால் யாரை வெளியே அனுப்ப வேண்டும், யாரை டைட்டில் வின்னராக்க வேண்டும் என்பதை முடிவு செய்பவர்கள் நாம் அல்ல. பிக் பாஸ் தான்.
டைட்டில் வின்னர்
தர்ஷன் விவகாரத்தை மட்டுமே எடுத்துக்கொண்டால் இது தெளிவாக புரியும். இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே தர்ஷன் தான் டைட்டில் வின்னர் எனும் கருத்தை சக போட்டியாளர்களை வைத்து மக்கள் மனதில் ஆழமாக பதிவு செய்தார் பிக் பாஸ். 50வது நாளில் கூட தர்ஷனுக்கு தான் முதல் மதிப்பெண் கிடைத்தது.
முன்பே சொன்னோம்
ஆனால் அதன் பிறகு ஓரிரு வாரங்களிலேயே தர்ஷனை கெட்டப் பிள்ளையாக காட்ட ஆரம்பித்தார் பிக் பாஸ். தேவையில்லாத விஷயங்களுக்காக சண்டை போடுவது, ஷெரினுடனான உறவு, டாஸ்க்குகளில் சரியாக விளையாடாதது என தர்ஷனின் இன்னொரு பக்கம் அதிகமாக காட்டப்பட்டது. இது பற்றி "ஹீரோ தர்ஷனை மெல்லமெல்ல வில்லனாக்கும் பிக் பாஸ்" என்ற தலைப்பில் ஏற்கனவே நாம் பதிவு செய்திருந்தோம்.
ஹீரோ தர்ஷனை மெல்லமெல்ல வில்லனாக்கும் பிக் பாஸ்.. அப்போ டைட்டில்வின்னர் சேரன் தானா? கியாரே செட்டிங்கா
ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது
நாம் சொன்னது மாதிரியே தான் இப்போது நடந்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர், வெளிமாநிலத்தை சேர்ந்த ஒருவர், வெளிநாட்டை சேர்ந்த இருவர் தான் பிக் பாஸ் பைனலிஸ்ட் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது தானாம். அதற்காகத் தான் இந்த காய் நகர்த்தல்கள் எல்லாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
கலங்காத தர்ஷன்
இப்படி முதலில் இருந்தே தர்ஷனை நம்பவைத்து பிறகு மோசம் செய்திருக்கிறார் பிக் பாஸ். ஆனால் இந்த விஷயத்துக்காக கலங்கிவிடவில்லை தர்ஷன். தற்போது வீட்டில் நண்பர்களுடன் தனக்கு பிடித்த புரோட்டாவும், கோழிக்கறியும் சாப்பிட்டுவிட்டு தெம்பாக இருக்கிறார். காதலி சனமும் அவருடன் இருப்பதாக தகவல். எப்படியோ ரீல் சுற்றும் ஷோ ஏமாற்றினாலும், ரியல் ஷோவில் தர்ஷன் கலக்கினால் சந்தோஷம் தான்.