twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வனிதா விவகாரம்.. சத்தமில்லாமல் ஷாக் கொடுத்த பிக் பாஸ்.. செம்ம கடுப்பில் மக்கள்.. செத்தான்டா சேகரு!

    வனிதாவை மீண்டும் போட்டியாளராக அறிவித்துள்ளார் பிக் பாஸ்.

    |

    சென்னை: வனிதாவை சிறப்பு விருந்தினர் என்று சொல்லி உள்ளே அழைத்து வந்து விட்டு, பிக் பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரி என பிக் பாஸ் கூறி இருப்பது சக போட்டியாளர்களை மட்டுமின்றி, மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    பிக் பாஸ் வீட்டில் முதல் வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப் பட்டவர் வனிதா விஜயகுமார். அப்போதிருந்து அந்த வீடே தனக்குத் தான் சொந்தம் என்ற மனப்பாங்கில் வாழ ஆரம்பித்து விட்டார் அவர். கேப்டன் மோடில் இருந்து அவர் மாறவேயில்லை.

    இதனால் வீட்டில் என்ன பிரச்சினை என்றாலும், நாட்டாமையாகி பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன் பேர்வழி என அதனை மேலும் பெரிதாக்கி விடுவது அவர் பழக்கம்.

    ஒரே ஒருவருடன் தான் பேச முடியும் என்றால் யாருடன் பேசுவீர்கள்? பிக்பாஸ் கேள்விக்கு லாஸ்லியா பதில்! ஒரே ஒருவருடன் தான் பேச முடியும் என்றால் யாருடன் பேசுவீர்கள்? பிக்பாஸ் கேள்விக்கு லாஸ்லியா பதில்!

    வெளியேறிய வனிதா

    வெளியேறிய வனிதா

    ஒரு வழியாக மூன்றாவது வாரமே அவர் வெளியேற்றப்பட்டார். இதனால் அப்பாடா என மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனி, பிக் பாஸ் வீட்டில் பிரச்சினைகள் இருக்காது, வனிதாவின் காட்டுக்கத்தல் இருக்காது என சந்தோசப்பட்டனர். ஆனால் வனிதா வெளியேற்றத்தால் பிக் பாஸ் வீட்டில் சரியான கண்டெண்ட்டே கிடைக்கவில்லை.

    விருந்தினராக வந்தார்

    விருந்தினராக வந்தார்

    இதனால், கடந்த வாரம் ஹோட்டல் டாஸ்க்கில் மீண்டும் வனிதாவை விருந்தினர் என்ற போர்வையில் வீட்டிற்குள் அழைத்து வந்தார் பிக் பாஸ். சரி விருந்தினர் தானே டாஸ்க் முடிந்ததும் வெளியேறி விடுவார் எனப் பார்த்தால். அவர் போகவேயில்லை. இதனால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர்.

    பிச்சினைகளை உருவாக்கினார்

    பிச்சினைகளை உருவாக்கினார்

    அவர் விருந்தினராக இருந்தபோதே அபி-முகென் பிரச்சினை, கவின் -மது பிரச்சினை என பல பிரச்சினைகளுக்கு காரணமானார். ஒரே வாரத்தில் அபியும் வெளியேறி விட்டார், மதுவும் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இந்தப் பிரச்சினைகளுக்கு வனிதா தான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

    பிக் பாஸ் அறிவிப்பு

    பிக் பாஸ் அறிவிப்பு

    இந்நிலையில், நேற்று நாமினேசனின் போது வனிதா வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்திருப்பதாக ஒரு பெரிய ஷாக் கொடுத்தார் பிக் பாஸ். இதைக் கேட்டு சக போட்டியாளர்கள் மட்டுமல்ல, மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போ வீட்டில் இருக்கிற அனைத்துப் போட்டியாளர்களையும் வெளியில் அனுப்பும் வரை வனிதா, பிக் பாஸ் வீட்டை விட்டு போக மாட்டார் என்பது தற்போது தெரிந்து விட்டது.

    காலில் சலங்கை

    காலில் சலங்கை

    சும்மாவே வனிதா ஆடுவார். இதில் பிக் பாஸ் அவரது காலில் சலங்கை கட்டி விட்டு விட்டார். இனி கேட்கவா வேண்டும். என்னவெல்லாம் பிரச்சினை பண்ணப் போகிறாரோ தெரியவில்லை என நெட்டிசன்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.

    English summary
    The evicted contestant Vanitha becomes the contestant again in bigg boss tamil 3 through wild card.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X