Don't Miss!
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ரூட்டு தல-ஐ மாத்தணும்.. கடும் நெருக்கடியில் பிக் பாஸ்.. வனிதா அவசரமாக வெளியேற்றப்பட்டதன் பின்னணி!
பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதாவை வெளியேற்றியதன் காரணம் தெரிய வந்துள்ளது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதாவை வெளியேற்றியதன் பின்னணியில் பிக் பாஸின் மிகப்பெரிய பிளான் உள்ளது.
பிக் பாஸ் வீடா இல்லை வனிதா வீடா என மக்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தவர் வனிதா. ஆனால் மூன்றாம் வாரமே அவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பின்னர் மீண்டும் அவரை வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டார். எதிர்பார்த்தபடியே கண்டெண்டுகளை வாரிக் கொடுத்த வனிதா, நேற்று மீண்டும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார்.
கவர்ச்சி மட்டும் போதாது... ஸ்ரீதேவியை போல் நடிப்பும் வேணும் - ஜான்விக்கு அட்வைஸ்
தவிப்பு
பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை யார் எது பேசினாலும், அதை வைத்து குட்டி கலாட்டாக்கள் பண்ணுவதில் வல்லவராக இருந்தார் வனிதா. இதனால் அவர் வெளியேற்றப்பட்டதும் இனி கண்டெண்ட்டுகள் கிடைக்காதோ என்ற தவிப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் திட்டம்
ஆனால், வனிதாவின் வெளியேற்றத்திற்கு பின்னணியிலும் சரி, இனி வரும் எபிசோட்களுக்கான பிளானிலும் சரி, பிக் பாஸ் வேறொரு திட்டம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இன்னமும், வீட்டுக்குள் சண்டை சச்சரவுகளை வைத்து மட்டும் ஓட்ட முடியாது.
கட்டாயம்
ஏற்கனவே இது பிக் பாஸா இல்லை சீரியலா எனக் கேட்கும் அளவிற்கு அழுகாச்சி காவியமாக நிகழ்ச்சி நகர்ந்து வருகிறது. காதல், நட்பு, குடும்ப செண்டிமெண்ட் என போர் அடிப்பதாக நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். எனவே, போட்டியாளர்களை ஆக்சனில் இறக்க வேண்டிய கட்டாயம் பிக் பாஸிற்கு வந்துவிட்டது.
சம்மதம்
இனியும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால், அவர் மூலம் ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே தான் இருக்கும். எனவே தான் அவரை வெளியில் அனுப்பி விட்டார்கள் என்கிறார்கள். பிரச்சினை செய்யாமல் உள்ளே இருந்தால் அவரது கெத்தே போய் விடும் என்பதால் வனிதாவும் இந்த காண்ட்ராக்ட்டிற்கு ஓகே சொல்லி விட்டார் போல.