Bigg Boss: பார்வதிக்கு இதுதான் அறிவுரை.. மேடைக்கு அழைத்தாலும் விஜய் சேதுபதி தெளிவாதான் இருக்காரு
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் இன்று அதாவது ஜனவரி 18ஆம் தேதி இறுதி நாளில் ஃபினாலேவில் உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த சீசனில் டைட்டிலை யார் வெல்வார்கள் என்று ஆர்வமுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே வெளியான தகவலின் படி திவ்யா கணேஷ் தான் டைட்டிலை வெல்வார் என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஃபினாலே கொண்டாட்டத்தில் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட விஜே பார்வதி மற்றும் கமருதீன் என இருவருமே கலந்து கொண்டார்கள்.
இப்படி இருக்கையில் விஜய் சேதுபதியிடம் கமருதீன் கேள்வி கேட்டபோது, பார்வதிக்கு என்ன அறிவுரை சொல்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அப்போது, பார்வதி மிகவும் அறிவான மற்றும் நன்கு படித்த பெண். அவர் அந்த அறிவையும் படிப்பையும் சரியான இடத்தில் பயன்படுத்தினால் பார்வதி இன்னும் பல உயரங்களைத் தொடுவார். நாம் விவாதிக்கும் போது கூட பார்வதியின் விவாதம் என்பது மொத்தமாக மாறுபட்டதாக இருக்கும். அப்படியான அறிவு கொண்ட பெண் பார்வதி, அவர் அந்த அறிவை சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எனது அறிவுரை என்று கூறினார். விஜய் சேதுபதி இவ்வாறு கூறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











