twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனி தம்பதியாக இருக்க முடியாது..கணவரை விட்டு பிரிகிறேன்..பகீர் தகவலை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்!

    |

    சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான வைஷ்ணவி தனது கணவரை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார்.

    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் வைஷ்ணவி. இவர் ரேடியோ தொகுப்பாளராகவும் உள்ளார்.

    இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல்வேறு சமூக கருத்துகளை தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

    இது நயன்தாரா இல்லைப்பா..ஏமாந்துடாதீங்க இது சின்னத்திரை நயன்தாரா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!இது நயன்தாரா இல்லைப்பா..ஏமாந்துடாதீங்க இது சின்னத்திரை நயன்தாரா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

    பிக் பாஸ் சீசன் வைஷ்ணவி

    பிக் பாஸ் சீசன் வைஷ்ணவி

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 2வில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த வைங்ணவி அந்த வீட்டில் 48 நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறினார். வீட்டை விட்டு வெளியே வந்த பின்பு வழக்கம் போல் தனது பணிகளை கவனிக்க தொடங்கினார். ஒருபக்கம் ஆர்ஜே, மாடலிங் என பிஸியாக இருந்த வைஷ்ணவி, சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவ்வாக உள்ளார்.

    வைஷ்ணவி கணவரை பிரிந்தார்

    வைஷ்ணவி கணவரை பிரிந்தார்

    இந்நிலையில், வைஷ்ணவி தனது கணவர் அஞ்சானை பிரிந்து விட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு பைலட்டான அஞ்சானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

    பிரிவதே நல்லது

    பிரிவதே நல்லது

    இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள வைஷ்ணவி, "6+ வருடங்கள் ஒன்றாக இருந்த நானும் அஞ்சானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். நான் இப்போதும் அவரை நேசிக்கிறேன், ஆனால் நாங்கள் இருவரும் உறவின் அழுத்தம் இல்லாமல் நாங்களாக இருக்க, நீண்ட ஆலோசனைக்குப் பின் பிரிவதே நல்ல என முடிவு செய்துள்ளோம்.

    நண்பர்களாக இருப்பதே சிறந்தது

    நண்பர்களாக இருப்பதே சிறந்தது

    எங்களிடம் நிறைய பொதுவான குணங்கள் இருந்தாலும், நாங்கள் நண்பர்களாக இருப்பதே சிறப்பு என்பதைக் கண்டுபிடிக்க இத்தனை ஆண்டுகள் எங்களுக்கு தேவைப்பட்டது. என்ன நடந்து இருக்கும் யாருக் என்ன பிரச்சனை என யூகிக்கும் அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோன் எங்களுக்குள் எதுவும் மோசமாக நடக்கவில்லை.

    இனி தம்பதியாக இருக்க முடியாது

    இனி தம்பதியாக இருக்க முடியாது

    தயவு செய்து எங்களுக்காக வருந்தாதீர்கள், ஏனென்றால் நாங்கள் பிரிந்ததற்கு வருந்தவில்லை. அஞ்சானும் நானும் இன்னும் நண்பர்களாக இருக்கிறோம். இனி தம்பதியாக இருக்க முடியாது என்ற இந்த முடிவை யோசித்து எடுத்தோம் என வைஷ்ணவி பதிவிட்டுள்ளார்.

    English summary
    bigg boss season 2 vaishnavi announce her divorce from her husband anjan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X