Don't Miss!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பிக்பாஸுக்கு கவின் மேல காண்டா? இல்ல சாக்ஷி மேல காண்டா? வச்சு செய்றாரே!
சென்னை: கவினுக்கு பிக்பாஸ் கொடுத்துள்ள டாஸ்க் யாரு மீதுள்ள காண்டு என பார்வையாளர்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாக்ஷி அகர்வாலை பார்வையாளர்கள் விஷ பாட்டில் என்றே அழைத்து வருகின்றனர். அந்த அளவுக்கு சைலன்ட்டாக சண்டை மூட்டி விட்டு வருகிறார் சாக்ஷி அகர்வால்.
கடந்த இரண்டு நாட்களாக நடிகர் கமல்ஹாசன் சாக்ஷியை கட்டம் கட்டி செய்தார். பிறந்த நாள் என்றும் பாராமல் குறும்படம் போட்டு அவரது முகத்திரையை கிழித்தார் கமல்ஹாசன்.
மூக்கை உடைத்த கமல்
நேற்றும் ஹவுஸ்மேட்ஸ்கள் பின்னால் பேசிய டயலாக்குகளை பேசிக்காட்டி மூக்கை உடைத்தார். அப்போது மதுமிதா, ஷெரின், சாண்டி ஆகியோர் தாங்கள் பேசியதை ஒப்புக்கொண்டனர்.
கமுக்கமாக உட்காந்திருந்த சாக்ஷி
ஆனால் சாக்ஷி மட்டும் ரேஷ்மா குறித்து பேசியதையும், கவின் குறித்து பேசியதையும் மீரா குறித்து பேசியதையும் ஒப்புக்கொள்ள வில்லை. மாறாக ஒன்றுமே தெரியாததுபோல் கமுக்கமாக உட்காந்திருந்தார் சாக்ஷி.
பாட்டுப்பாடவா பார்த்து பேசவா
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புரமோவில் ஹவுஸ்மேட்ஸ்க்கு பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அதாவது பாட்டுப்பாடவா பார்த்து பேசவா என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது அந்த டாஸ்க்.
பொய் காதல் நாடகம் ஏனடி?
இதில் கவின் பங்கேற்கும் போது நீயா பேசியது, என் அன்பே நீயா பேசியது என்ற பாடல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பாடும் கவின் கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி.. அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி.. என்று பாடுகிறார்.
பாடல் பாடிய கவின்
முழுக்க முழுக்க அந்த பாடலை சாக்ஷியை மட்டுமே பார்த்து பாடுகிறார் கவின். அப்போது சிரித்தபடியே எழுந்து நிற்கும் சாக்ஷி, ஒரு கட்டத்தில் தலையணையை எடுத்து கவின் மீது எறிகிறார். இப்படியாக உள்ளது அந்த டாஸ்க்.
கரெக்ட்டான பாடல் தான்
இதனை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ்க்கு கவின் மீது காண்டா இல்லை சாக்ஷி மீதா? இப்படி வச்சு செய்கிறீர்களே என்று கேட்க தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த பாடல் இந்த ஸ்ட்சுவேஷனில் இருவருக்கும் தேவைதான். கரெக்டா பல்ஸ பிடிச்சு வேலை பார்க்குறாருய்யா இந்த பிக்பாஸ்!