Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு வந்த சிக்கல்.. ஆறு மேட்ச்சிலும் ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பிக்பாஸ் போட்டியாளருக்கு மலேசியாவில் விருது!
சென்னை : தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. பிக்பாஸ் போட்டியாளர்களில் ஶ்ரீ, நமீதா தவிர அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், வீட்டுக்குள் போட்டியாளர்களின் அழகான நெகிழ்ச்சித் தருணங்கள் குறும்படமாகக் காட்டப்பட்டது. போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அதைக் கண்டு ரசித்தனர். பிறகு, அதைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தமிழ் மக்கள் உலகம் முழுவதும் உள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியும் உலகம் முழுவதும் பிரபலமானத்தில் ஆச்சர்யமில்லை. ஆனால் மலேசிய துணை பிரதமர் தமிழ் பிக் பாஸ் போட்டியாளருக்கு விருது ஒன்றை அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் சுவர் ஏறிக் குதித்து தப்பிக்க முயற்சி செய்த பரணிக்கு மலேசிய மக்கள் நாயகன் என்ற விருது மலேசிய அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளதாம். இந்தத் தகவலை நடிகர் பரணியே கமல்ஹாசன் முன்னிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறினார்.
பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சியையும், போட்டியாளர்களையும் கலாய்த்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட மீம்களை திரையில் ஒளிபரப்பினர். ரைசா, ஜூலி ஆகியோரைக் கலாய்த்திருந்த மீம்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர்.