பைனலில் டிவிஸ்ட் வைத்த பிக் பாஸ்... ஜனனிக்கு ரன்னர் அப்!
பிக்பாஸ் 2 இறுதிச் சுற்றில் ஜனனி ரன்னர் அப் என தெரியவந்துள்ளது
சென்னை: பிக்பாஸ் 2 கிராண்ட் பினாலேவில் ஜனனி ரன்னர் அப் என தெரியவந்துள்ளது.
மூன்றுமாதங்களாக தமிழக மக்களை மகிழ்வித்த பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நாளையோடு நிறைவடைகிறது. நாளை நடைபெற உள்ள கிராண்ட் பினாலே நிகழ்வை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் பல சுவாரஸ்யத் தகவல்கள் வருகின்றன.

மறுபடியும் முதல்ல இருந்தா எனக் கேட்பதுபோல் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் எல்லா போட்டியாளர்களும் வந்துவிட்டனர்.
பல சந்தர்ப்பங்களில் வெளியே வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா வெளியேறாததால் அவரை வெற்றியாளராக்க பிக்பாஸ் ரகசியத் திட்டம் வைத்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னராக ரித்விகா அறிவிக்கப்பட உள்ளதாக இன்று தகவல் வெளியானது. தற்போது ஜனனிதான் ரன்னர் அப் எனத் தகவல் கசிந்துள்ளது.
ஜனனியை கோபப்படுத்தும் சந்தர்ப்பங்கள் அமைந்தாலும், பல நேரங்களில் மிக சாதுர்யமாகக் கையாண்டார். அதனால் டைட்டில் வின்னராகும் வாய்ப்பு அவருக்கும் இருப்பதாக கருதப்பட்ட நிலையில், அவர் ரன்னர் அப் என தகவல் கிடைத்துள்ளது.
வில்லன் இல்லையென்றால் சினிமா ரசிக்கும்படியாக இருக்காது என்பதுபோல் கடந்த சீசனில் ஜூலியை வைத்து ஓட்டினர். இப்போது அதேபோல், ஐஸ்வர்யாவை வைத்து காலம் தள்ளியிருப்பது தெரியவந்துள்ளது. ஆனா என்னதான் இருந்தாலும் ஜூலிம்மா மாதிரி வராதுப்பா.


Click it and Unblock the Notifications











