Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'ப்யூட்டிஃபுல்' காட்சிகள், வசனங்கள்.... நாளுக்கு நாள் மெருகேறி வரும் பொம்மலாட்டம்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பொம்மலாட்டம். ஆரம்பத்தில் இந்த தொடர் ஒளிபரப்பானபோது முகம் சுளிக்க வகையிலான காட்சிகள் அதிகம் இருப்பதாகவும், ரொமான்ஸ் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது சீரியல் வித்தியாசமான டிராக்கில் மாறிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக கதிர் -பாரதியின் காதல் எபிசோட்.. எவ்வளவு அழகான வசனங்கள், சின்னச் சின்ன காட்சியமைப்புகள்.. பார்க்கவே படு ப்யூட்டியாக இருக்கிறது இந்தக் காட்சிகள்.
கதிர் வேடத்தில் வரும் அப்சரின் நடிப்பு படு க்யூட்... தனது அனுபவத்தை அப்படியே கொட்டி அழகாக நடித்து வருகிறார் அப்சர். அவர் பேசும் வசனங்களை ஆழமாக நேசித்து ரசி்க்க முடிகிறது. காதலை அவர் வெளிப்படுத்தும் விதம், காதலி தன் மீது காட்டும் பரிவு பாசம் காதலை அவர் ரசிக்கும் விதம், காதலிக்கு தேவையான அறிவுரைகளைக் கூறும்போது காட்டும் பக்குவம், பொறுப்பான பேச்சு, தெளிவான செயல்பாடுகள் .. சூப்பர்ப் அப்சர்.
பாரதி மட்டும் சும்மாவா என்ன.. தனது காதலனை எப்படியெல்லாம் தைரியமூட்ட முடியுமோ, எப்படியெல்லாம் நம்பிக்கை தர முடியுமோ.. அதையெல்லாம் செய்து இப்படி ஒரு காதலி நமக்குக் கிடைக்க மாட்டாளா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டார். பண்பட்ட நடிப்பைக் கொட்டி வருகிறார். தனது நடிப்பால். பொறுப்பான ஒரு காதலி மற்றும் குடும்பத்தைத் தாங்கி நிற்கும் தூண், அழகான சிரிப்பு, காதலன் மீது வைத்துள்ள பாசத்தை, நேசத்தை வெளிப்படுத்தும் பாங்கு, வெட்கப் புன்னகை... சான்ஸே இல்லை பாரதி.
பொம்மலாட்டம் வர வர அழகான கவிதை போல மாறி வருகிறது.. குறிப்பாக கதிர், பாரதியின் காதல் காட்சிகள்!.