Don't Miss!
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சேரன்.. கட்டியணைத்த ஹவுஸ்மேட்ஸ்.. கடுப்பில் கவின்.. என்னாகபோகுதோ?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த சேரனை ஹவுஸ்மேட்ஸ்கள் கட்டியணைத்து வரவேற்றனர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த சேரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை எவிக்ட்டானார் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எல்லோருக்கும் பிரியாவிடை கொடுத்துவிட்டு கமலை சந்தித்தார் சேரன்.
அப்போது சேரனை சீக்ரெட் ரூமுக்குள் அனுப்பப்போவதாக அறிவித்தார் பிக்பாஸ். இதனை தொடர்ந்து சீக்ரெட் ரூமுக்கு சென்ற சேரன், அங்கிருந்தபடியே அனைத்தையும் கவனித்தார்.
டவுட்டை கிளப்பிய வனிதா
இந்நிலையில் நேற்று அவர் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கடிதம் மூலம் கேள்வி கேட்டார். கடிதத்திற்கு பதில் அளித்தனர் ஹவுஸ்மேட்ஸ்கள். ஏற்கனவே எப்படி ஒளிபரப்பபடுகிறது என்பதை பார்த்த வனிதா அதற்குள் இங்கு நடந்த விஷயங்கள் டிவியில் ஒளிபரப்பப்பட்டிருக்காது, சேரன் இங்குதான் சீக்ரெட் ரூமில் இருக்கிறார் என டவுட்டை கிளப்பினார்.
கத்தி ஆரவாரம்
தொடர்ந்து அண்ணா அண்ணா என்றும் அழைத்தார். இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் சீக்ரெட் ரூமில் இருந்து சேரன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். அவரை பார்த்ததும், சாண்டி, லாஸ்லியா, வனிதா, ஷெரின், முகென், தர்ஷன் ஆகியோர் அவரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியில் கத்தி ஆரவாரம் செய்தனர்.
என் சக்கரை கட்டி
தர்ஷன் சேரனை தூக்கியே விட்டார். லாஸ்லியாவை அதே பாசத்துடன் சக்கரை கட்டி என கொஞ்சி மகிழ்ந்தார். இங்கேயே இருந்து எல்லாத்தையும் பார்த்து ஒட்டு கேட்டு வர்றீங்களா என்று செல்ல சண்டை போட்டார் வனிதா.
கடுப்பில் கவின்
கவின் சேரனுக்கு கை மட்டும் கொடுத்தார். சேரனும் பெரிதாக ஒன்றும் அவரை கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே சேரன், தங்களின் காதல் விஷயத்தில் தலையிடுவதை கவின் விரும்பவில்லை. நேற்றைய எபிசோடில் சேரன் யார் நம் விஷயத்தில் என்று லாஸ்லியாவை மறைமுகமாக தூண்டிவிட்டார்.
என்ன நடக்கப்போகுதோ?
இவற்றையும் சேரன் சீக்ரெட் ரூமில் இருந்து பார்த்தார். இந்நிலையில் இருவரும் இன்று நேருக்கு நேர் சந்திக்கவுள்ளதால் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.