Just In
- 6 min ago
லேடீஸ் நாட் அலவ்டு.. அடப்பாவமே ஷகிலாவுக்கே இந்த நிலைமையா? சோகத்தில் ரசிகர்கள்!
- 19 min ago
வாவ்.. தர்பார்.. விஜய் 27.. இவ்ளோ மேட்டர் இருக்கா.. பீட்ஸ் 5ன் டாப் அப்டேட்ஸ்!
- 25 min ago
செமபோதை.. காதலி பற்றி எக்குதப்பாக உளறல்.. ஆடியோ பதிவு செய்த நண்பர்.. பீதியில் பிரபல நடிகையின் காதலர்
- 46 min ago
தமிழ் சினிமாவின் டாப் அப்டேட்ஸ்.. அசத்தல் தகவல்கள்.. என்னன்னு பாருங்க மக்களே!
Don't Miss!
- Automobiles
புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை வைத்து இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்
- News
சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் தரவில்லை-அகதி கோரிக்கை நிராகரிப்பு: ஈகுவடார் விளக்கம்
- Finance
நீங்க ஜியோ வாடிக்கையாளாரா.. இதே ஜியோவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. !
- Technology
திடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து திட்டங்களை நீக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.!
- Lifestyle
சோலார் எனர்ஜியின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Sports
ரேங்கிங் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இதுதான் முக்கியம்.. உண்மையை உடைத்த கோலி!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கலாச்சாரத்தை சீர்குலைக்கிறார்கள்: கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், விஜய் டிவி மீது போலீசில் புகார்
சென்னை: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி மீது இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் விஜய் டிவி மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் "நீங்களும் வெல்லலாம்' என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கடந்த 15,16,17ம் தேதிகளில் ஒளிப்பரப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் நடிகர் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார்
அதுபோலும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார்.
அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். அந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.
பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா?
நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோளாக இருந்து வருகின்றன. எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.