Don't Miss!
- Automobiles இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
இனி தமிழ்நாட்டில் யாராவது மொட்டை கடுதாசி எழுதுவாங்க?
சென்னை: மொட்டை கடிதம் எழுதிய டேனி மீது பிக் பாஸ் 2 பார்வையாளர்கள் கொலவெறியில் உள்ளனர்.
பிக் பாஸ் 2 வீட்டில் வைத்த புகார் பெட்டியில் கமல் ஹாஸன் பெயருக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கமலிடம் அளித்தனர். கமலோ கடிதத்தை எலிமினேஷன் பெயர் இருக்கும் கவரில் வைத்து எடுத்து வந்தார்.
போட்டியாளர்களை பார்த்து நேரடியாக எலிமினேஷனுக்கு போய்விடலாம் என்றார். அதை கேட்ட போட்டியாளர்கள் சிரித்தாலும் அவர்கள் முகத்தில் டென்ஷன் இருந்தது.
பொன்னம்பலம்
சும்மா உங்களுடன் விளையாடினேன் என்று கூறிவிட்டு பொன்னம்பலம் பற்றி எனக்கு ஒரு மொட்டை கடிதம் வந்துள்ளது, அதை எழுதியது யார் என்று கூறினால் அவர் பெரிய மனிதன், இல்லை என்றால் வெறும் மனிதன் என்றார். உடனே டேனி அது நான் தான் சார் என்று நல்ல பிள்ளையாக கையை தூக்கினார். பொன்னம்பலம் செய்வதறியாது சிரித்து மழுப்பிக் கொண்டிருந்தார்.
கடிதம்
அந்த கடிதத்தில் டேனி கூறியிருப்பதாவது, இன்னும் பெண்களை தப்பாக பேசிக்கிட்டுத் தான் இருக்கிறார் பொன்னம்பலம். என்னை பற்றி ரொம்ப தப்புத் தப்பா கமல் சாரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். எல்லாமே அவருடைய பொய்த்தனம். இப்பவும் அவர் தொடர்ந்து தப்பு பண்ணிக்கிட்டே தான் இருக்கிறார் என்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தை கமல் வாசித்தார்.
பொய்
கடிதத்தில் எழுதியது உண்மையா, பொய்யா என்று கேட்க இப்போ இது பொய் என்றார் டேனி. அவர் சொன்னதை கேட்டு கமல் மட்டும் அல்ல அனைவருக்குமே குழப்பம் ஏற்பட்டது. கடிதத்தில் எழுதியது பொய் என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்றார் டேனி. பொய் என்றால் அதை எதற்காக கடிதமாக எழுதி பார்வையாளர்களாகிய எங்களை சாகடிக்கிறீர்கள் டேனி.
குழப்பம்
டேனியின் பேச்சை கேட்ட கமல் இனி எதற்கு இந்த கடிதம் என்று அதை தூக்கி வீசிவிட்டார். மொட்டை கடிதம் எழுதியதற்கு ஒரு மொக்கை விளக்கத்தை அளித்து சமாளித்தார் டேனி. கடிதம் குறித்து குழம்பிய கமல் நான் வீட்டிற்கு சென்று யோசித்துவிட்டு வந்து கூறுகிறேன் என்றார். இப்ப என்னதான்யா சொல்ல வர்ற டேனி. அனைவரின் கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என நினைக்கிறார் என்று போட்டியாளர்கள் கூறியது மிகவும் சரியே. அதை தான் மொட்டை கடிதம் மூலம் செய்துள்ளார் டேனி.