Don't Miss!
- News கோவையில் மறுவாக்குப்பதிவு நடத்தணும்.. 1 லட்சம் வாக்குகளை காணோம்.. அண்ணாமலை பரபர புகார்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
டியர் வாசகர்களே, உங்களை நெளிய வைக்கும் டிவி நிகழ்ச்சிகள் எவை என சொல்லுங்களேன்!
சென்னை: தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளால் நெளிய வேண்டி உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.
தொலைக்காட்சிகளில் வெளியாகும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக நடிகைகள் ஸ்ரீப்ரியா, ரஞ்சனி ஆகியோர் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகர் கேப்டன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றை விமர்சித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
@ A certified 🎥 films not allowed inTelevision.straight A Uncertified topics allowed!!!! Height of Stupidity. pic.twitter.com/A1t7dObdta
— S.VE.SHEKHER (@SVESHEKHER) December 4, 2016
ஏ சான்றிதழ் படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதி இல்லை. ஆனால் சான்றிதழ் பெறாத ஏ வகையான நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி. முட்டாள்தனத்தின் உச்சம் என தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த ஒன்இந்தியா வாசகர்கள் பிரபலங்கள் சொன்னால் தான் மீடியா கவனிக்கிறது, எங்களை போன்ற சாதாரண மக்கள் கூறினால் கேட்பது இல்லை. மக்களை நெளிய வைக்கும் இது போன்ற நிகழ்ச்சிகள் பல உள்ளன என தெரிவித்துள்ளனர்.
அன்பு வாசகர்களே, சாதாரண மக்களின் கருத்தையும் ஊடகங்கள் கேட்கும். உங்களை நெளிய வைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பெயர்களை எங்களிடம் கூறுங்கள். அதை நிச்சயம் உரியவர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்.