Don't Miss!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Naam Iruvar Namakku Iruvar Serial: தக்காளி ஜூஸ்... தேவி சொல்லும்போது எவ்ளோ அழகு!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மதுரைக்கே மல்லி வேணுமான்னு கேட்ட மாதிரி, மாயன் கிட்டேயே தக்காளி ஜூஸை போட்ருவேன்னு தேவி மிரட்டிட்டு போறா. தக்காளி.. கொள்ளை அழகா இருக்குதுங்க!
அரவிந்துக்கும், தாமரைக்குந்தேன் முதலிரவு.. மாயன் குதூகலம் ஆகிறான். வீட்ல இருக்கும் மொத்த பேரையும் கடை வீதிக்கு போயிட்டு லேட்டா வாங்கன்னு அனுப்பி வச்சுட்டான். விவரமா தேவியை மட்டும் வீட்டுல வச்சுக்கிட்டான்.
டேய் நீ என்ன எண்ணத்துல அவங்களை அனுப்பி வச்சேன்னு எனக்குத் தெரியும்டா... சத்தியமா சொல்லு.. யதார்த்தமாவா அவங்களை அனுப்பி வச்சேன்னு கேட்கறா.மாயன் சத்தியவானாச்சே..உண்மையை மட்டும்தானே பேசுவான்.
அடிக்கடி சொல்லுவியே
சொல்லுடா.. என்ன எண்ணத்துல அப்படி சொன்னேன்னு கேட்கிறாள். எனக்கு பொய் சொல்ல வராதுங்கன்னு மாயன் சொல்றான். எனக்குத் தெரியுண்டா.. உனக்கு போய் சொல்ல வராது.. ஆனா, எனக்கு கோவம் நல்லா வரும். அடிக்கடி நீ சொல்லுவியே..என்னது அதுன்னு கேட்கறா. தெரிஞ்சா அவளே சொல்ல வேண்டியதுதானேன்னு நாம நினைக்கறதுக்குள்ள அவளே சொல்றா.
கொண்டே புடுவேன்
ஆங்.. தெரிஞ்சு போச்சு.. ஓழுங்கா இருந்துக்க.. இல்லேன்னா கொண்டே போட்ருவேன்னு அவன் பாணியில் சொல்லி மிரட்டறா. இது கூட தேவி வாயால் சொல்லும்போது எல்லா மதுரை மக்களும், அதாவது .மாயனும் சொல்ற மாதிரி சாதாரணமத்தேன் இருந்துச்சு. ஆனால், போகிற போக்கில் மாயன் சொல்ற இன்னொரு லைன் சொல்லிட்டு போனா பாருங்க..
தக்காளி ஜூசை போட்ருவேன்
மாயனை விட்டு தேவி சற்றே தள்ளி போயி, லேசா திரும்பிப் பார்த்து, மாயன் என்ன சொல்ல போறாளோன்னு எதிர்பார்த்து நிற்க, தேவி சொல்றா.. தக்காளி ஜுஸைப் போட்ருவேன்னு..இது மதுரைக்கே மல்லி வேணுமான்னு மயன்கிட்டேயே அவன் டயலாக்கை பன்ச் வச்சு பேசியது போல ரசிக்கும்படி இருந்துச்சு.
அரவிந்த் தாமரை
தாமரையும், அரவிந்தும் சேர்ந்து 3 ஜோடிகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சு பரிகாரத்தை முடிச்சுட்டாங்க. இப்போ ரெண்டு பேருக்கும் முதலிரவுன்னு சந்தோஷமா குடும்பமே வெளியில் போயிட்டாங்க. மாயனை கடுப்பேத்த, வரும்போது உனக்கும் பாப்கார்ன் வாங்கிட்டு வரேன்னு சொல்லி கிளம்பறா மாயனின் அக்கா... கடுப்புல இருக்கான் மாயன்.