Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
Naam Iruvar Namakku Iruvar Serial: தக்காளி ஜூஸ்... தேவி சொல்லும்போது எவ்ளோ அழகு!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மதுரைக்கே மல்லி வேணுமான்னு கேட்ட மாதிரி, மாயன் கிட்டேயே தக்காளி ஜூஸை போட்ருவேன்னு தேவி மிரட்டிட்டு போறா. தக்காளி.. கொள்ளை அழகா இருக்குதுங்க!
அரவிந்துக்கும், தாமரைக்குந்தேன் முதலிரவு.. மாயன் குதூகலம் ஆகிறான். வீட்ல இருக்கும் மொத்த பேரையும் கடை வீதிக்கு போயிட்டு லேட்டா வாங்கன்னு அனுப்பி வச்சுட்டான். விவரமா தேவியை மட்டும் வீட்டுல வச்சுக்கிட்டான்.
டேய் நீ என்ன எண்ணத்துல அவங்களை அனுப்பி வச்சேன்னு எனக்குத் தெரியும்டா... சத்தியமா சொல்லு.. யதார்த்தமாவா அவங்களை அனுப்பி வச்சேன்னு கேட்கறா.மாயன் சத்தியவானாச்சே..உண்மையை மட்டும்தானே பேசுவான்.
அடிக்கடி சொல்லுவியே
சொல்லுடா.. என்ன எண்ணத்துல அப்படி சொன்னேன்னு கேட்கிறாள். எனக்கு பொய் சொல்ல வராதுங்கன்னு மாயன் சொல்றான். எனக்குத் தெரியுண்டா.. உனக்கு போய் சொல்ல வராது.. ஆனா, எனக்கு கோவம் நல்லா வரும். அடிக்கடி நீ சொல்லுவியே..என்னது அதுன்னு கேட்கறா. தெரிஞ்சா அவளே சொல்ல வேண்டியதுதானேன்னு நாம நினைக்கறதுக்குள்ள அவளே சொல்றா.
கொண்டே புடுவேன்
ஆங்.. தெரிஞ்சு போச்சு.. ஓழுங்கா இருந்துக்க.. இல்லேன்னா கொண்டே போட்ருவேன்னு அவன் பாணியில் சொல்லி மிரட்டறா. இது கூட தேவி வாயால் சொல்லும்போது எல்லா மதுரை மக்களும், அதாவது .மாயனும் சொல்ற மாதிரி சாதாரணமத்தேன் இருந்துச்சு. ஆனால், போகிற போக்கில் மாயன் சொல்ற இன்னொரு லைன் சொல்லிட்டு போனா பாருங்க..
தக்காளி ஜூசை போட்ருவேன்
மாயனை விட்டு தேவி சற்றே தள்ளி போயி, லேசா திரும்பிப் பார்த்து, மாயன் என்ன சொல்ல போறாளோன்னு எதிர்பார்த்து நிற்க, தேவி சொல்றா.. தக்காளி ஜுஸைப் போட்ருவேன்னு..இது மதுரைக்கே மல்லி வேணுமான்னு மயன்கிட்டேயே அவன் டயலாக்கை பன்ச் வச்சு பேசியது போல ரசிக்கும்படி இருந்துச்சு.
அரவிந்த் தாமரை
தாமரையும், அரவிந்தும் சேர்ந்து 3 ஜோடிகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சு பரிகாரத்தை முடிச்சுட்டாங்க. இப்போ ரெண்டு பேருக்கும் முதலிரவுன்னு சந்தோஷமா குடும்பமே வெளியில் போயிட்டாங்க. மாயனை கடுப்பேத்த, வரும்போது உனக்கும் பாப்கார்ன் வாங்கிட்டு வரேன்னு சொல்லி கிளம்பறா மாயனின் அக்கா... கடுப்புல இருக்கான் மாயன்.