Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இடுப்பில் தண்ணிப் பானை.. நைஸாக நடந்து வந்த தர்ஷா.. தவித்துப் போன ரசிகர்கள்!
சென்னை: பாவாடை சட்டையில் தண்ணிப் பானையைத் தூக்கிப் பிடித்து அழகாக நடந்து வரும் போஸ்ட் போட்டுள்ளார் நடிகை தர்ஷா குப்தா.
சும்மா பார்த்தாலே அள்ளுதே என ரசிகர்களும் நரம்பு புடைக்க இந்த போட்டோவைப் பார்த்து ரசித்து வருகிறார்கள்.
இதயமில்லாத தனுஷ் ரசிகர்கள்.. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படி கடுப்பாக என்ன காரணம்?
உன்னையே நீ நம்பு ஒரு நாள் உயர்வு நிச்சயம் என்ற அருமையான தத்துவ மொழியையும் அதில் போட்டு வைத்துள்ளார் தர்ஷா.
முள்ளும் மலரும் தர்ஷா
ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் மூலமாக தான் அறிமுகமானர் தர்ஷா குப்தா. இந்த சீரியலில் பாவாடை தாவணியில் படு பவ்வியமாக கிராமத்து சாயலை கொஞ்சம் கூட மாறாமல் கலக்கியிருப்பார் .அதுவும் இந்த சீரியலில் இவர் நடித்தார் என்று சொல்வதை விடவும் முதல் சீரியலில் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார் .
அழகிய வில்லி
இந்த சீரியலில் முதலில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை வில்லியாக மாறி இவர் சைட் ரோலில் களமிறங்குகிறார் என நினைத்த நேரத்தில் இவர்தான் கதாநாயகியாக மாறிவிட்டார் .இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அவருடன் நடித்தவர்களுக்கும் கொஞ்சம் ஷாக்காக இருந்திருக்கிறது.
அதனால்தான் முதல் சீரியலில் இவருக்கு அதிகமான கசப்பான சம்பவம் நடந்திருக்கிறது என கூறியிருக்கிறார்.
பல டேக்குகள்
இந்த சீரியலில் இவர் நடிக்கும்போது முதல் சீரியல் என்பதால் நடிப்பை பற்றி ஒன்றுமே தெரியாமல் தான் வந்திருக்கிறார் .அதனால் இவருக்கு சில நேரங்களில் பல டேக்குகள் வாங்கி இருக்கிறது .அதை பார்த்து இவருடன் இந்த சீரியலில் இருந்த ஒரு சிலர் ஒன்னுமே தெரியாமல் நடிப்புக்கு வந்து விட்டாரே என்று அவர் காதுபடவே பேசியிருக்கிறார்கள். இவருக்கு சீரியலில் மட்டுமல்லாமல் அதை தாண்டியும் இணையதளங்களிலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர் .
Recommended Video
டிக்டாக்கில் பாப்புலர்
டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலத்தில் டிக்டாக்கில் பாப்புலரான நபராக வலம் வந்துகொண்டிருந்தார் .இதில் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. அதனாலே இவருடைய போஸ்ட்கள் ஒவ்வொன்றும் வைரலாக பரவி வந்தது .பாவாடை தாவணியிலும் மாடல் உடையிலும் கலக்கலாக டிக்டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். அது தடை செய்யப்பட்டதும் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரை தேர்ந்தெடுத்து விட்டார்.
படை பட்டாளம்
தற்போது இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரெல்லாம் ஒரு நடிகையா என முதலில் பேசியவர்கள் முன்பு தற்போது இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் படை பட்டாளத்தையே வைத்திருக்கிறார் .அதனாலேயே இவர் ஒரு போஸ்ட் போட்டாலும் அதை இவருடைய ரசிகர்கள் வைரலாக்கி விடுகின்றனர். இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் மாடலாகவும் மாடலிங் செய்து கொண்டிருக்கிறார் .
அடிக்கடி போட்டோஸ்
இதற்காக அடிக்கடி போட்டோக்களையும் எடுத்து வருகிறார். அந்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடவும் இவருடைய ரசிகர்கள் தங்களுடைய ஃபேன்ஸ் பேஜ்களில் அதை போஸ்ட் போட்டு வைரலாகி வருகின்றனர் .அந்த மாதிரிதான் தற்போது இவர் பாவாடை சட்டையில் கிணற்றில் தண்ணீர் எடுத்தது போல அழகான ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு இருக்கிறார்.
இடுப்பில் தண்ணிப் பானை
பாவாடையை தூக்கி சொருகியப்படி இடுப்பில் இவர் தண்ணி பானையை வைத்துக்கொண்டு கலக்கலான புன்னகையால் பார்ப்பவர்களை கண்ணிமைக்க மறக்க வைத்திருக்கிறார். இவருடைய இந்த போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர் .அதிலும் நெட்டிசன்கள் தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது என பாட்டு பாடி வம்பு இழுக்கின்றனர். ஆனால் தர்ஷாவோ சூப்பரான வாழ்க்கைத் தத்துவத்தை தனது போஸ்ட்டில் போட்டுள்ளார்.