Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சாமியாடி கண்ணன் உண்மையை சொன்னானா பொய்யா...? அக்கா பொய்னு சொல்றாங்களே....!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் கடந்த ரெண்டு நாளா கண்ணன் சாமியாடி குறி சொல்வதுதான் போயிகிட்டு இருந்துச்சு.
ஒரு வழியா சாமியாடிய கண்ணன் கருப்பன்ன சாமியா வந்து, முத்துசெல்விக்கும், கண்ணனுக்கும்தான் கல்யாணம் செய்து வைக்கணும்னு சொல்லிடறான்.
முத்துச்செல்வி குதூகலிக்கறா.... ரொம்ப நம்பிக்கையா இருந்த விஜயலட்சுமி அம்மா, கண்ணனின் குறியால் ரொம்பவும் உடைஞ்சு போறாங்க.
எனக்கு தெரியும் உன் மனசு
நான் உன்னை சின்ன வயசுலேர்ந்து வளர்த்தவ டா... உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா...நீ கண்ணனாத்தான் அன்னிக்கு குறி சொன்னே.... உனக்குள்ள கருப்பன்ன சாமி வந்து நீ குறி சொல்லலை. அப்படி சொல்லி இருந்தால் உன் மனசுல யாரு இருக்கன்ற உண்மை வெளியில வந்து இருக்கும்னு விஜயலட்சுமி சொல்றாங்க.
கல்யாணத்தை தாலி எடுத்து
என் கல்யாணத்தை தாலி எடுத்து குடுத்து நீதான் நடத்திக் கொடுக்கணும்க்கான்னு சொல்றறான். அது மட்டும் நடக்காது. என்னால முடியாது. இதுவரைக்கும் உனக்கு ஒரு அக்கா இருந்தா..அவ செத்துட்டான்னு நினைச்சுக்கோன்னு சொல்லிட்டு போயிடறாங்க.
கவலை முத்துசெல்விக்கு
சின்னவரு சாமியாடி முத்துசெல்வியை கல்யாணம் பண்ணி வைன்னு மட்டும்தான் சொன்னாராம். ஐ லவ் யூ சொல்லலியாம் அந்த கவலையில உட்கார்ந்து இருக்கா.என்னக்கா நீ இதுக்கு போயி கவலைப்படறே..அத்தனை பேர் முன்னால சாமியாடி உன்னைத்தான் கண்ணனுக்கு கல்யாணம் செய்து வைக்கணும்னு சொன்னாரே அது போதாதான்னு கேட்கறா தங்கை தங்கம்.
அக்காக்கள் சவுந்தர்யாவின்
சவுந்தர்யாவின் அக்காக்கள் ரெண்டு பேரும் முத்துசெல்விகிட்ட வந்து எங்க குடும்பத்தையே பிரிச்சுட்டியேடி.எங்க அம்மா தனக்கு ஒரு தம்பியே இல்லைன்னு சொல்லிட்டு,கண்ணன் மாமாவை ஒத்துக்கிட்டாங்க. அப்படி என்னடி எங்க குடும்பம் உங்களுக்கு துரோகம் செய்ததுன்னு கேட்கறாங்க.
சவுந்தர்யாவிடம் கண்ணன்
கண்ணன் சவுந்தர்யாவிடம் அக்கா சொன்னதை சொல்லிட்டு அழறான். இன்னுமா அக்கா மனசுல இருக்கறதும், சவுந்தர்யா மனசுல இருக்கறதும் கண்ணனுக்கு தெரியாம போயிரும். ஆகாஷை நீ கல்யாணம்செய்துக்க சவுண்டு..அப்போதான் அக்காவுக்கு என் மேல இருக்கும் கோவம் கொஞ்சமாவது குறையும்னு கெஞ்சறான்.
அப்போ அக்காவுக்கு தன் மேல இருக்கும் கோவம் எதுக்குன்னு கண்ணனுக்கு தெரியுதுன்னுதானே அர்த்தம்...எனக்கு அப்படித்தான் புரியுது.