Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
Roja serial:விஷத்துல கூட உள்நாட்டு வெளிநாட்டு விஷம்னு ஆரம்பிச்சுட்டீங்களா
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் முருகனுக்கு காவடி எடுத்த ரோஜாவுக்கு சாக்ஷி இம்போர்ட்டட் விஷம் குடுக்கறாளாம்.
ரோஜா,அணு, ஷாக்ஷி மூணு பேருமே சாந்த மூர்த்தி ஐயா அனாதை ஆஸ்ரமத்துல வளர்ந்தவங்க இதில் ரோஜா குடும்பத்தைக் கண்டுபிடிச்சுட்ட அணு, தான்தான் பிரியாவா இந்த வீட்டில் காணாமல் போனக் குழந்தைன்னு அவங்க வீட்டுல அடைக்கலம் புகுந்துடறா.
சாக்ஷி தனியா இருக்கா, ரோஜா அர்ஜுனை கல்யாணம்பண்ணிக்கிட்டு, தன் வீடு இதுதான்னு தனக்கு தெரியாமலே வாழ்ந்துகிட்டு இருக்கா.
கொலையில் இருவரும்
பையா கணேஷை ஆஸ்ரமத்தை நடத்தி வந்த சாந்த மூர்த்தி அய்யாதான் கொன்னுட்டார்னு அவர் மேல் பழியைப் போட்டு,கொலை செய்த அணுவும், சாக்ஷியும் தப்பிச்சுக்கறாங்க. இப்போ சாந்த மூர்த்தி ஐயாவை வெளியில் கொண்டு வரணும், உண்மை குற்றவாளிகள் அணுவையும், சாக்ஷியையும் சிறையில் போடணும். அதோட, ரோஜாவின் உண்மையான அப்பா அம்மா யாருன்னு கண்டு பிடிக்கணும். இதுதான் ரோஜா புருஷன் அர்ஜுனோட டார்கெட். அர்ஜுன் ஒரு வக்கீல்.
அணு வாழ
ரோஜா இடத்தில்தான்தான் ரோஜான்னு குடியேறிய அணு அர்ஜுனை முறைப்படி மாமான்னு கூப்பிடறா..அவனை கல்யாணம் செய்துக்கிட்டு ரோஜாவைத் துரத்தி விடணும்னு நினைக்கறா. ஆனால், ரோஜாவும், அர்ஜுனும் கல்யாணம் செய்துகிட்டாங்க.இருவரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரையே வச்சு இருக்காங்க.இந்த சமயத்துலதான் முருகனுக்கு காவடி எடுத்துகிட்டு, நடை பயணமாக கோயிலுக்கு வரும ரோஜாவை கொலை செய்ய அணுவும், சாக்ஷியும் திட்டம் போடறாங்க.
கொலை செய்ய
ரோஜாவை விஷம் வைத்து கொலை செய்யறதுனால என்ன வந்துடப் போகுதுன்னு தெரியலை. அதோட, பையா கணேஷ் கொலையில் இருந்து தப்பிக்க அர்ஜுனைத்தான் உன்னால கல்யாணம் செய்துக்க முடியலை. அவன் தம்பி அஷ்வினையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த வீட்டில் செட்டிலாகிரு. தம்பி பொண்டாட்டின்னு உன்னை அர்ஜுன் காட்டி கொடுக்க மாட்டான்னு சாக்ஷி சொல்றா..
ஏன் கொலை
இதுல ரோஜாவை கொலை செய்யறதுனால என்ன பிரயோஜனம்... அதுக்கான மோட்டிவ் என்னனு சரியா சொல்லை. ஆனா, விஷம் மட்டும் இம்போர்ட்டட் விஷமாம். அதை நீர் மோர் பந்தலில் மோர் கொடுத்துக்கொண்டு இருந்த ஒருத்திகிட்ட குடுத்து விஷத்தை கலக்க சொல்லி ரோஜாவுக்கு குடுக்க சொல்றா சாக்ஷி. விஷத்துல உள்நாட்டு விஷம்... வெளிநாட்டு விஷம்னு புதுசா எதுக்கு ஆரபிக்கறீங்க?