Don't Miss!
- News வடஇந்தியாவில் 13 மாநிலங்களில் பாஜகவிற்கு சிக்கல்.. ஆக்சிஸ் மை இந்தியா இயக்குனர் சொன்ன தகவல்!
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காலியான பிக் பாஸ் இடம்... புதிய சீரியலை களமிறக்கும் விஜய் டிவி
சென்னை : விஜய் டிவியில் கடந்த 3 மாதங்களாக பிக் பாஸ் சீசன் 5 களைகட்டியது. ஏராளமான ரசிகர்களை கட்டுப்படுத்தியது.
நேற்றுடன் அந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது தினந்தோறும் 10 மணிக்கு புதிய சீரியல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் முன்னதாக மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த தொடரின் சீசன் 2 தினந்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
பாவாடை தாவணியில்… இடுப்பை வளைத்து நெளித்து… சாமி சாமி பாடலுக்கு டான்ஸ் ஆடிய யாஷிகா ஆனந்த்!
பிக் பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியின் நிகழ்ச்சிகளிலேயே மிகவும் பிரபலமானது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த 3 மாதங்களாக விஜய் டிவியில் இரவு 10 முதல் 11 மணிவரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. மற்ற சீசன்களை போலவே இந்த சிசனுக்கும் ஏராளமான ரசிகர்கள் காணப்பட்டனர்.
ஏராளமான ரசிகர்கள்
பிக் பாஸில் பங்கேற்ற போட்டியாளர்களிடையே அன்பு, பாசம், ஏச்சுக்கள், பேச்சுக்கள், வன்மம் என அனைத்தும் இந்த நிகழ்ச்சியில் காணப்பட்டது. தங்களது அடுத்த வீட்டில் நடக்கும் சம்பவங்களை பார்ப்பதை போல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்தனர்.
வெற்றி பெற்ற ராஜு
இந்நிலையில் நேற்றைய தினம் ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டது. இதேபோல பிரியங்கா ரன்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து பிக்பாஸ் ஓடிடியிலும் ரிலீசாக உள்ளதாக கமலே அதை தொகுத்து வழங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்தது தொடர்
இதனிடையே, பிக்பாஸ் நடைபெற்று வந்த ஸ்லாட்டில் அடுத்ததாக என்ன நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது. தற்போது ப்ரமோ மூலம் அதை தெளிவாக்கியுள்ளது விஜய் டிவி. விஜய் டிவியில் முன்னதாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஈரமான ரோஜாவே தொடரின் சீசன் 2 இன்று முதல் தினந்தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரமான ரோஜாவே தொடர்
ஈரமான ரோஜாவே தொடர் முன்னதாக 2018 ஜூலை 9ம் தேதி துவங்கி, 2021 ஆகஸ்ட் 14ம் தேதிவரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக அமைந்தது. இதில் பவித்ரா, திரவியம் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். மொத்தம் 807 எபிசோட்களுடன் இந்த தொடர் நிறைவடைந்தது.
ஈரமான ரோஜாவே சீசன் 2
இந்நிலையில் தற்போது ஈரமான ரோஜாவே தொடர் சீசன் 2 இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதையொட்டி கடந்த டிசம்பர் 25ம் தேதி தொடரின் முதல் பிரமோ வெளியானது. இதில் திருமணத்தின்போது மணப்பெண் கடத்தப்பட அவரது தங்கை மணப்பெண்ணாவதும் மீட்கப்படும் அக்கா, மாப்பிள்ளையின் தம்பியை மணமுடிப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது.
Recommended Video
புதிய பிரமோ
இந்நிலையில் இன்றைய தினம் ஒரு புதிய பிரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் இந்த இரு ஜோடிகளின் திருமணத்திற்கு முந்தைய காதல் காட்டப்பட்டுள்ளது. இன்று முதல் ஒளிப்பரப்பாகவுள்ள இந்த சீரியல் ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் சின்னத்திரையை காணவுள்ளது.