Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ட்விஸ்ட்ன்னா இது தான் ட்விஸ்ட்...கோபிக்கு பாக்யா வச்சு செம ஆப்பு...இதை யாருமே எதிர்பார்க்கல
சென்னை : விஜய் டிவி சீரியல்களிலேயே எதிர்பாராத பல திருப்பங்களுடன், மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பது பாக்யலட்சுமி சீரியல் தான். எப்போதெல்லாம் ரசிகர்கள் கொஞ்சம் டல் அடிப்பதாக உணர்கிறார்களோ எப்போதெல்லாம் கரெக்ட்டாக சரியான ட்விஸ்ட் வைத்து சபாஷ் வாங்கி விடுகிறார் டைரக்டர்.
தற்போதும் பாக்யலட்சுமி சீரியலில் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் டிவி சீரியல்களில் தற்போது இந்த சீரிலுக்கு தான் அதிக டிஆர்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. தினம் தினம் அடுத்து என்ன எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.
பாக்யா - கோபிக்கு டைவர்ஸ் ஆகி விட்டது. அடுத்து பாக்யா என்ன செய்ய போகிறார்? கோபி - ராதிகா கல்யாணம் நடக்குமா? என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கையில், ஓட்டலில் எழிலுடன் சென்று பிரியாணி, சிக்கன் என சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வருகிறார் பாக்யா.
ராதிகாவை சந்திக்கும் பாக்யா...பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்க போகிறது ?
பாக்யாவை துரத்த துடிக்கும் கோபி
ஒட்டுமொத்த குடும்பமும் பாக்யாவுடன் வாக்குவாதம் செய்கிறது. இனியா, பாக்யா வீட்டை விட்டு போக கூடாது என தடுத்து, கதறி அழுகிறாள். மாமியார், மாமனார், ஜெனி என அனைவரும் பாக்யாவிடம் சென்டிமென்டாக, கோபமாகவும் வாக்குவாதம் செய்கிறார்கள். ஆனால் கோபி, பாக்யாவை வீட்டை விட்டு துரத்துவதில் குறியாக இருக்கிறார்.பாக்யா, கோபியிடம் அவமானப்படுவதை தாங்க முடியாமல், வா போகலாம் என கூப்பிடுகிறார் எழில்.
இனியாவிடம் பாக்யா கேட்கும் கேள்வி
கடந்த வாரம் முழுவதும் இப்படியே மாறி மாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாக்யாவுடன் பெட்டியில் துணிமணிகளுடன் வந்து விட்டார். எல்லோரும் பேசி முடித்து விட்ட பிறகு பாக்யா பேச துவங்குகிறார். அட என்னப்பா இப்படி மாறி மாறி பேசிக்கிட்டே இருக்கீங்க...அடுத்து என்னன்னு சொல்லுங்கப்பா என ரசிகர்கள் கடுப்பாகி கேட்டு வந்தனர். இந்த சமயத்தில் இனியாவிடம், உனக்கு அப்பா கூட இருக்கனுமா? அம்மா கூட இருக்கனுமா என பாக்யா கேட்கும் சஸ்பென்சுடன் கடந்த வார எபிசோட் முடிகிறது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொ வெளியிடப்பட்டுள்ளது.
இது செம ட்விஸ்டா இருக்கே
அதில் கோபி, இனி மேலும் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என பெட்டியை தூக்கி, வெளியே வீசி விட்டு, பாக்யாவையும் வெளியே தள்ளி முயற்சி செய்கிறார். ஆனால் வெளியே விழும் பெட்டி ஓப்பனாக, அதில் பாக்யாவின் டிரெஸிற்கு பதிலாக கோபியின் டிரெஸ் தான் இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமே ஷாக்காகி நிற்கிறது. ஷாக்குடன் கோபமான கோபி, என்ன தைரியம் இருந்தால் என்னுடைய டிரெசை பேக் செய்திருப்பார் என பாக்யாவை அடிக்க கை ஓங்குகிறார்.
சபாஷ் பாக்யா...சரியான பதிலடி
கோபியின் அப்பா, அவரை தடுத்து விடுகிறார். இப்போது பேச துவங்கும் பாக்யா, நான் எதற்காக வெளியே போக வேண்டும்.காலம் காலமாக ஆண்கள் தவறு செய்வதற்கு, பெண்கள் கண்ணீருடன் நடுத்தெருவில் நிற்க வேண்டுமா? என கோபியை நேருக்கு நேர் நிற்க வைத்து கேள்வி கேட்கிறார்.இதற்கு கோபியின் அப்பா ராமமூர்த்தி சபாஷ் பாக்யா என்கிறார். ஒட்டுமொத்த குடும்பமும் எதிர்பாராத இந்த திருப்பத்தால் உறைந்து நிற்கிறது.
அடுத்து என்ன நடக்க போகிறது?
இந்த ப்ரொமோவை பார்த்து விட்டு, நெட்டிசன்களும் பாக்யாவிற்கு சபாஷ் போட்டு வருகின்றனர். இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலியே. பாக்யா பெட்டியுடன் புறப்பட்டதும், வீட்டை விட்டு எழிலுடன் வெளியே போய், சம்பாதித்து கோபி முன்னாள் முன்னேறி காட்டுவார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தால், யாருமே எதிர்பாராமல் கதையை வேறு டிராக்கில் மாற்றி விட்டாரே டைரக்டர் என பலரும் உற்சாகமாக இந்த வார எபிசோட்களை பார்க்க ஆவலாக காத்திருக்கின்றனர்.