Don't Miss!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாரதி கண்ணம்மா தொடரில் இதுதாங்க வேணும்... ரசிகர்கள் தொடர் கோரிக்கை!
சென்னை : விஜய் டிவியின் தொடர்கள் அனைத்தும் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவை.
அதில் முதன்மை இடத்தில் உள்ளது பாரதி கண்ணம்மா தொடர்.
இந்தத் தொடரில் நாயகனும் நாயகியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயனை திடீரென பாராட்டிய விஜய்....அட இதற்காகத்தானா?
பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி தொடர்களும் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவையாக உள்ளன. குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா எப்போதும் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டாக காணப்படுகிறது. இந்த தொடரில் தொடர்ந்து ரசிகர்களை எப்போதும் பரபரப்பாக வைத்திருப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் இயக்குநர்.
பிரிந்துள்ள நாயகன், நாயகி
இந்த தொடரில் சந்தேகம் காரணமாக நாயகனும் நாயகியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தன்னுடைய குழந்தைக்கு அப்பா பாரதிதான் என்று சமீபத்தில் கண்ணம்மா அனைவர் முன்னிலையிலும் தெரிவிக்க, அதை மறுத்தார் பாரதி. மேலும் தான் வளர்ப்பு குழந்தையாக வளர்த்துவரும் குழந்தை குறித்த உண்மையும் அவருக்கு தெரியாமல் உள்ளது.
சதி வேலையில் வெண்பா
இவர்களது இந்த பிரிவை வைத்து, பாரதியை அடைய முயல்கிறார் வெண்பா. அதையொட்டி அவரது சதி வேலைகளும் காண்பவர்களை மிகவும் பரபரப்புக்கு உள்ளாக்கி வருகிறது. சமீபத்தில் குழந்தை ஹேமாவிற்கு பிரியாணி தந்து தன்பக்கம் இழுக்க முயல்கிறார் ஹேமா. இதையொட்டிய வாக்குவாதத்தில் அவரை அறைந்து விடுகிறார் கண்ணம்மா.
கோபத்தில் பாரதி
அந்த நேரத்தில் அங்குவரும் பாரதி, கண்ணம்மாவை கண்டிக்கிறார். ஹேமாவிடம் கண்ணம்மாவிற்கு எந்த உரிமையும் இல்லை என்று கோபத்தில் கத்திவிட்டு வெண்பாவுடன் அங்கிருந்து சென்று விடுகிறார். இத்தகைய காட்சிகள் தொடரின் விறுவிறுப்புக்கு துணையாக இருக்கின்றன.
ரசிகர்களின் கேள்வி
ஆயினும் தன்னுடைய குழந்தைகள் லஷ்மி மற்றும் ஹேமா குறித்த உண்மையை பாரதிக்கு விளங்க வைக்க கண்ணம்மாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலிக்காமல் போகிறது. இந்த உண்மை எப்போதுதான் பாரதிக்கு தெரியவரும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
Recommended Video
பாரதிக்கு உண்மை தெரிய வேண்டும்
தொடர்ந்து இந்த ஒரே விஷயத்தை வைத்தே கதையை நகர்த்தாமல், பாரதிக்கு உண்மையை தெரிய வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஹேமா யாருடைய குழந்தை என்பது பாரதிக்கு தெரியவர வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாக உள்ளது.