நாரதர் ஆனார் லாஸ்லியா.. வெறுக்கத் தொடங்கும் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவின் நடவடிக்கை அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
பிக்பாஸ் வீட்டின் காதல் மன்னனாக சுற்றி வரும் கவின் ஒரே நேரத்தில் சாக்ஷி - லாஸ்லியா என இரண்டு பேரிடமும் நெருக்கமாக பழகினார். சாக்ஷியுடனான நெருக்கத்தை காதல் என இருவரும் கூட்டாக ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.
அதன்பிறகும் லாஸ்லியாவுடன் நெருக்கமானார் கவின். ஆனால் அந்த உறவுக்கு இன்னும் என்ன பெயர் என்று தெரியவில்லை. சாக்ஷியை கவின் காதலிப்பது தெரிந்தபின் டபுள் கேம் விளையாடுகிறாய், நீ செய்தது பெரிய தப்பு, நடிக்கிறாய், சாக்ஷியுடன் பழகியதை என்னிடம் சொல்லியிருக்கலாமே, நானும் லூசு போல் பழகிவிட்டேன் என்று கவினை திட்டி தீர்த்தார் லாஸ்லியா.

சண்டை மூட்டி விடுகிறார்
அதன்பிறகு கவினிடம் இருந்து விலகியிருந்த லாஸ்லியா தற்போது மீண்டும் நெருக்கமாகியுள்ளார். கவினுடன் தனிமையில் பேசுவது, கையை கோர்த்து நடப்பது என கொண்டாடி வருகிறார். சாக்ஷிக்கும் கவினுக்கும் இடையில் சண்டையை மூட்டி விடும் வகையில் சாக்ஷிமீது ஒரு காரணத்தை கூறி அவரை நாமினேட் செய்தார் லாஸ்லியா.

போட்டியின்றி காதலிக்கலாம்
சாக்ஷி வெளியேறிவிட்டால் கவினை போட்டியின்றி காதலிக்கலாம் என முடிவு செய்துவிட்டார் போலும் லாஸ்லியா. இதேபோல் கவினை திட்டிய காரணத்தால் மதுமிதாவின் பெயரையும் நாமினேட் செய்தார் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த புதிதில் மிகவும் அமைதியாக இருந்தார் லாஸ்லியா.

வெறுக்க தொடங்கிவிட்டனர்
இதனால் மக்களிட்ம் ஆதரவை பெற்றார். இந்நிலையில் கவினுடனான காதலுக்காக எல்லோரையும் எதிரியாக்கி கொள்கிறார் லாஸ்லியா. அவரது நடவடிக்கையால் அவருக்கு இருந்த பெயர் கொஞ்சம் கொஞ்சமாக டேமெஜ் ஆகி வருகிறது. லாஸ்லியா நாரதர் வேலையை தொடங்கிவிட்டார் என்று கூறி அவரை வெறுக்க தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.
நாரதர் வேலை
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் லாஸ்லியா எவில் மோடில் உள்ளார். கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையே நாரதர் வேலையை செய்துவிட்டார்.. மர்மமாக இருக்கிறது என்கிறார் இந்த நெட்டிசன்.
பழி தீர்க்குற கேரக்டர்தான்
லாஸ்லியா நேர்மையான பொண்ணா? ஏன் மதுக்கிட்ட நேரடியா சொல்ல வேண்டியது தானே நாமினேஷன்ல சொல்றா? இவளும் மனசுக்குள்ள வச்சு பழி தீர்க்குற கேரக்டர்தான் என்று கூறுகிறார் இவர்.
லாஸ்லியா நல்லா வருவம்மா
உண்மைதான் ஷெரின், லாஸ்லியா நாமினேஷன் செய்த போதே பார்த்தோமே எவ்வளவு ஒரு தலைபட்சமா இருக்கான்னு.. கவின பத்தி பின்னாடி பேசினதுக்காக மதுவ நாமினேட் பண்ணிட்டா.. லாஸ்லியா நல்லா வருவம்மா.. என்கிறார் இந்த நெட்டிசன்.
லாஸ்லியா நாறப்போகிறார்
பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்று கூறுவார்கள். இங்கு கக்கூஸ் கவினோடு சேர்ந்து, லாஸ்லியா நாறப்போகிறார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
கழுதை போல் ஆனாலும்
லாஸ்லியா பத்தி சிம்பிளா சொல்லனும்னா வர வர மாமியா கழுதை போல ஆனாளாம், போன வாரம் கவின் - சாக்ஷி இடையே மூன்றாவது வீலை போல் உணர்ந்ததாக கூறி கவினிடம் இருந்து விலகியிருந்தார். ஆனால் தற்போது சாக்ஷியை கவினிடம் நெருங்கவேவிட மாட்டேங்கிறாள். கவினின் கையை பிடித்துக்கொண்டே அலைகிறாள் என்கிறார் இவர்.
வெறுப்பாக மாற பார்க்கிறது
லாஸ்லியா உங்களை பார்த்தாள் ஒரு ஈர்ப்பு வருது ஆனால் நீங்க செய்கின்ற வேலைகளினால் அது வெறுப்பாக மாற பார்க்கிறது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











