இனிய தமிழிசை தரும் மக்கள் இசை

மக்கள் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் இசை' நிகழ்ச்சியை ஆர்த்தி தொகுத்து வழங்குகிறார்.
கடந்த சனிக்கிழமையன்று திருக்குறளில் இடம் பெறும் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்துப் பாடல், புத்தர் கலைக்குழு மணிமாறன் இயற்றிய பாடல், பாவலர் பரிணாமன் பாடல் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் இயற்றிய பாடல்கள் இடம் பெற்றன. ஞாயிறன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தென்கச்சி சுவாமிநாதன், பாவலர் காசி ஆனந்தன், முனைவர் குணசேகரன் மற்றும் கல்கி இயற்றிய பாடல்கள் இடம் பெற்றன. பாடகர்கள் சித்தன் ஜெயமூர்த்தி, கற்பகம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று பாடல்களை பாடினார்கள்.
தமிழிசை பாடல்களை இசையோடு கேட்பதே இன்பம்தான். திரைப்பாடல்களைக் கேட்டு சலித்துப்போன ரசிகர்கள் கொஞ்சம் மக்கள் இசையை கேட்டு மகிழலாமே.


Click it and Unblock the Notifications











