Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
Kalyana veedu serial: கோபி வந்துட்டார் இனி சீரியல் களைக்கட்டுமா?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் கடந்த மூணு மாசமா காணாமல் போயிருந்த கோபி, இப்போ மகாபலிபுரத்தில் இருக்கார்.
அவருடன் தலையில் முக்காடு போட்டு, நீண்ட தலைமுடியுடன் ஒரு பெண்ணை காமிக்கிறார்கள். அந்த பெண்ணின் முகத்தை காமிக்கவில்லை.
ராஜா ரோஜா
ராஜாவை கல்யாணம் செய்துக்க ரோஜா என்ன கிரிமினல் முறைகளை கையாண்டாளோ, அதை விட பல மடங்கு கிரிமினல்களை ராஜா சூர்யாவை கல்யாணம் செய்துக்க செய்து வர்றான்.கோபி குடும்பத்தையே கடத்தி வந்து, மகாபலிபுரத்தில் செல்வத்துக்கு தெரிந்த ரெசார்ட்டில் தங்கவச்சுட்டு கல்யாண வேலைகளை பார்க்கிறான்.
ஸ்வேதா ரோஜா
ரோஜா ஆஸ்பத்திரியில் இருந்து ஸ்வேதாவுடன் தப்பிச்சு வந்துடறா.அக்கா சூர்யாவை ராஜாவிடம் இருந்து காப்பாத்த செல்வத்தின் ஆளை பின் தொடர்ந்து வந்து, ராஜாவுக்கும், சூர்யாவுக்கும் மகாபலிபுரத்தில்தான் கல்யாணம் நடக்கிறது என்று தெரிந்து ஸ்வேதாவுடன் அங்கு வந்துடறா.
கோபியும் அந்த பெண்ணும்
ஒரு ரெசார்ட்டில் ரோஜா, ராஜா தங்கி இருக்கானான்னு செக் பண்ணிக்கிட்டு இருக்கும்போது, கோபி அந்த பெண்ணுடன் வெளியில் நின்று காபி சாப்பிட்டுக்கொண்டு நிக்கறான். இதை ரோஜாவும், ஸ்வேதாவும் கவனிக்காமல் இருக்க, கடைசியில் இவர்கள் வெளியில் போகும் போது கோபி அங்கு இல்லை.
கோபி வரட்டும்
கோபி வந்தால்தான் அவன் ஸ்வேதாவின் அண்ணனுக்கு செய்து கொடுத்த சத்தியம் செல்லுமா, அவன் ஸ்வேதாவை கல்யாணம் செய்துக்குவானா, இல்லை காதலிச்ச சூர்யாவை கல்யாணம் செய்துக்குவானா போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரியும்.
அண்ணன் ஸ்வேதா
ஸ்வேதா கோபியை சூர்யாவுக்கு விட்டுத் தருவாளா, ஸ்வேதாவின் அண்ணன் தனது தங்கச்சியைத்தான் கோபி செய்து குடுத்த சத்தியத்தின் படி கல்யாணம் செய்துக்கணும் என்று சண்டைக்கு வருவானா என்றும் தெரியும். ஆனால், கோபியுடன் கோபி மாட்டிகிட்டு இருக்கான் என்பதைம் இனிமேல்தான் பார்க்க முடியும்.
இப்போது கோபியின் கல்யாண விஷயம் முடிவுக்கு வருமா, இல்லை இன்னும் இழுத்துகிட்டே போகுமான்னு போகப் போகத்தான் தெரியும்.