Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தலை நிறைய மல்லிகைப் பூ வச்சிக்கிட்டு எங்கப் போறாங்க குஷ்பு.. ஓஹோ மறுபடியும் சீரியல் என்ட்ரியா!
சென்னை: நடிகை குஷ்பு மீண்டும் சின்னத்திரை பக்கம் தலையை சாய்த்து பார்க்கத் தொடங்கி இருக்கிறார்.
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை தொடரில் தான் ஸ்பெஷல் அப்பியரன்ஸாக நடிகை குஷ்பு நடித்துள்ளார்.
நாங்க வேற மாதிரி....வலிமை சிங்கிள் டிராக் எப்போ தெரியுமா...சுடசுட வந்த அப்டேட்
அதன் அட்டகாசமான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தலை நிறைய மல்லிகைப் பூ வைத்து குஷ்பு நடந்து வரும் அழகே தனி தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜாக்கெட்டுக்கு பிரபலம்
ரஜினி, கமல், கார்த்தி, விஜயகாந்த், சத்தியராஜ், சரத்குமார் என ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து கலக்கிய நடிகை குஷ்பு, ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜாக்பாட் ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். ஜாக்பாட் நிகழ்ச்சியில் குஷ்பு போட்டு வரும் வித விதமான டிசைன் ஜாக்கெட்டுகள் தான் பெண்கள் மத்தியில் அந்த நிகழ்ச்சியை விட அதிகம் பேசப்பட்டது.
சீரியல் என்ட்ரி
சினிமாவில் குஷ்பு நடித்த நடிப்புக்கு ரசிகர்கள் கோயிலே கட்டி கொண்டாடினர். பொதுவாகவே ஹீரோயின்களின் செகண்ட் இன்னிங்ஸ் சீரியல் தான் என்பது போல எழுதப்படாத அந்த விதியில் நடிகை குஷ்புவும் இறங்கி வந்தார். குங்குமம், கல்கி, மருமகள், லட்சுமி ஸ்டோர்ஸ், நந்தினி என ஏகப்பட்ட தொடர்களில் நடித்து கலக்கினார்.
அவ்னி கிரியேஷன்ஸ்
சீரியல்களில் நடித்தது மட்டுமின்றி அவ்னி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஏகப்பட்ட சீரியல்களையும் அவர் தயாரித்து வந்தார். சமீப காலமாக சீரியலுக்கு லீவு விட்டு இருந்த நடிகை குஷ்பு தற்போது மீண்டும் சின்னத்திரை பக்கம் எட்டிப் பார்த்துள்ளது குஷ்பு ரசிகைகளுக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை அளித்து வருகிறது.
கோகுலத்தில் சீதை
சினிமா படங்களின் பெயர்களை வைத்து ஏகப்பட்ட சின்னத்திரை தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி ஜி தமிழில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் கோகுலத்தில் சீதை தொடரில் தான் நடிகை குஷ்பு கேமியோ ரோலில் நடித்துள்ளார். அதன் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மங்களம் மாமி
டான்ஸ் மாஸ்டர் நந்தா, அறிமுக நடிகை ஆஷா கவுடா நடித்து வரும் கோகுலத்தில் சீதை தொடர் கடந்த 2019ம் ஆண்டு முதல் ஜி தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் புதிய இணைப்பாக மருத்துவர் மங்களம் மாமி கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பு நடிக்க உள்ளார். அவர் என்ட்ரி கொடுக்கும் அசத்தல் ப்ரோமோ வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
தலை நிறைய பூ
குஷ்புவுக்கே பூவா என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு பின் பக்கத்தில் இருந்து நடிகை குஷ்பு கலக்கலாக நடந்து வரும் அதிரடி என்ட்ரி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தலை நிறை மல்லிகைப் பூ வைத்துக் கொண்டு கையில் கூலிங் கிளாஸை சுழற்றி ஸ்டைலாக மாட்டும் வீடியோ வேற லெவல்.
செம ட்விஸ்ட்
இந்த சீரியலில் நந்தா அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடைய அம்மா கதாபாத்திரமான சுசித்ரா தனது மகனுக்கு இனியா என்ற பெண்ணை நிச்சயம் செய்து வைத்திருக்கிறார். ஆனால், வசுந்தரா எனும் பெண்ணையும் அவருக்கு பிடித்துப் போக இருவரில் யாரை தேர்வு செய்வது என தெரியாமல் குழம்பித் தவிக்கிறார்.
குஷ்பு தீர்த்து வைப்பாரா
சுசித்ராவின் மனக் குழப்பத்தை தீர்த்து வைக்க அவரது தோழி மங்களம் மாமி கதாபாத்திரத்தில் தான் நடிகை குஷ்பு இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார். வசுந்தரா மற்றும் இனியா இருவரில் யாரை குஷ்பு தேர்வு செய்வார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடம் காத்திருக்கின்றனர்.