சுகாசினி வழங்கும் ‘கோல்டு கேசினோ’ கேம் ஷோ

'கோல்டு கேசினோ' நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு முதலில் 20 தங்க காசுகள் கொடுக்கப்படும். கேட்கப்படும் கேள்விக்கு போட்டியாளர் தன் கையில் இருக்கும் எத்தனை தங்க காசுகளை வேண்டுமானாலும் பந்தயம் வைக்கலாம். போட்டியாளர்கள் வைக்கும் தங்க காசின் அளவைப் பொறுத்து பேங்கரும் அதேஅளவு தங்க காசுகளை வைப்பார். இதில் ஜெயித்தால் பந்தயத்தில் வைக்கப்பட்ட அத்தனை காசுகளும் போட்டியாளருக்கு போய்ச் சேரும். தோற்றாலோ பந்தயம் வைத்த காசு மட்டும் பேங்கருக்கு சென்று விடும். இதைத்தொடர்ந்து போட்டியாளர் தன்னிடம் இருக்கும் மீதமுள்ள தங்க காசுகளுக்கு ஆட்டத்தை தொடரலாம்.
போட்டியாளர் 40 தங்க காசுகளை ஜெயித்ததும், முதலில் பேங்கரிடம் இருந்து பெற்ற 20 தங்கக் காசுகளை அவரிடம் திருப்பிக் கொடுத்து விடடு ஆட்டத்தை தொடரலாம். மொத்த தங்கக்காசுகளையும் பந்தயம் வைத்து விளையாடி, 10 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்கிறவர்கள் 5 கிலோ தங்கத்தை தட்டிச்செல்லலாம்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. சுகாசினி மணிரத்னம் இதனை தொகுத்து வழங்க இருக்கிறார். ஏற்கனவே ஜெயா டிவியில் ஆட்டோகிராப் நிகழ்ச்சியை சுகாசினி தொகுத்து வழங்கி வருகிறார். பிரபலங்களை பேட்டி காணும் அந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இது தங்கம் தொடர்பான நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களிடையே வரவேற்பினை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











