Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
Lakshmi stores serial: ப்பூ தாத்தாவின் கோவம் இம்புட்டுதானா?
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பீச்சில் ரவுடி பசங்க சாரி நல்ல பசங்க தொல்லையால் ரவி, பாக்கிய லட்சுமிக்கு தாலி கட்டிடறான்.
இதை வீட்டில் சொன்னால் கமலா கல்யாணத்துக்கு எதுவும் தடையா இருந்துட போகுதுன்னு இப்போ சொல்ல வேணாம்னு பாக்கிய லட்சுமி சொல்லிடறா. தாத்தாவுக்கு சத்தியம் செய்து குடுத்ததனால தன் காதலை மறைச்சதையும் ஒப்புக்கறா.
தாலியை மறைச்சு வச்சுக்கோ பஞ்சு..நேரம் வரும்போது வீட்டுக்கு சொல்லிடலாம்னு ரவி சொல்லித் தர்றான்.
உள்ளாட்சி தேர்தலே நடத்தலயாம்.. கை கழுவுறதுக்கு தண்ணி இல்லயாம்.. இதுல இவுக வேற! நெட்டிசன்ஸ் ரகளை!
பாக்கியலட்சுமி அண்ணன்
வீட்டுக்கு வந்ததும் பாக்கிய லட்சுமியின் அண்ணி இந்த நேரத்துல வயசு பையனோட வந்திருக்கே... குடும்பமா இதுன்னு கத்தறாங்க.என் தங்கச்சி ஒருத்தனோட ஓடிப்போயிட்டா.. இவளைப் பாருங்க ஒரு நாளைக்கு திருட்டு தாலி கட்டிக்கிட்டு வரப்போறான்னு திட்டிட்டு போயிடறாங்க. அண்ணனும் தாத்தாவும் பாக்கிய லட்சுமிக்கு சமாதானம் சொல்றாங்க.
தாத்தா பாக்கியலட்சுமி
தாத்தா தனியாக அறையில் இருந்த நேரம்பார்த்து பாக்கியலட்சுமி நடந்ததைச் சொல்றா. அதிர்ச்சியான தாத்தா..சீ உன்னைப் போயி நம்பினேன் பாருன்னு சொல்லிட்டு, தாலியை கழட்டி தூரப்போட வேண்டியதுதானேன்னு சொல்லிட்டு போயிடறார். பிறகு வந்து ரவிகிட்ட நான் பேசணும்னு சொல்றார்.சரி தாத்தான்னு சொல்லி ரவியைக் கோயிலுக்கு வரவைக்கறா பாக்கியலட்சுமி.
எங்கே போச்சு
கோயிலில் தாத்தா ரவிகிட்ட பேசறார். உங்களை எனக்கு பிடிக்கும் தம்பி... நீ ரொம்ப நல்லா வளர்க்கப்பட்ட புள்ள.. கல்யாணம் உங்க கையை மீறி நடந்து போச்சு.இல்லாட்டி அந்த ரவுடி பய என் பேத்தி கழுத்துல தாலி கட்டி இருப்பானேன்னு புலம்பறார். நீங்க வீட்டில் இதைப் பத்தி சொல்லாம இருப்பது தப்பு தம்பி.மகாலட்சுமி அம்மாகிட்ட உண்மையை சொல்லுங்க. இது என் பேத்தி வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். நல்லது நடக்கற வரைக்கும் எனக்குத் தூக்கம் வராதுன்னு கோவமே இல்லாம சமாதானமா பேசறார்.
அர்ச்சனை கோயிலில்
கோயிலில் அர்ச்சனை பண்றாங்க.ரவி பேர் நட்சத்திரத்தை பாக்கிய லட்சுமி சொல்ல, பாக்கிய லட்சுமி பேர் நட்சத்திரத்தை ரவி சொல்ல, கோயிலில் சின்ன ரொமான்ஸ்.பார்த்து ரசிக்கிறார் தாத்தா. அது மட்டுமா,அர்ச்சகர் குங்குமம் தர,அதை மறைச்சு வச்சிருக்கும் தாலியை எடுத்து அதில் வச்சுக்கறா. எல்லாம் பதி பக்திதான்.. சீரியலை பார்க்கறவங்களுக்குத்தான் கோயிலுக்கு வந்திருக்கும் ரவியின் அண்ணி உமா பார்த்துருவாங்களோன்னு பக்கு பக்குன்னு இருக்குது. கடைசியா பாக்கிய லட்சுமி,அவ தாத்தா,அவ தங்கச்சி பேசிகிட்டு இருக்கறதை உமா அண்ணி பார்த்துட்டு நிக்கறாங்க.