Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
Naam Iruvar Namakku Iruvar serial: கதவை சாத்திக்கிட்டு எதுக்குங்க வேஷ்டி கட்டணும்?
சென்னை: தேவி ரூமுக்குள் என்ட்ரி.. மாயன் இடுப்பில் வேஷ்டியை மறைச்சு நின்னுகிட்டு, எங்கே கட்டலாம் எங்கே கட்டலாம்னு மேலே பார்த்துகிட்டு நிக்கறான். ஏய்..சீச்சீ...என்னடா பண்றேன்னு கேட்டுகிட்டே அந்தப் பக்கமா திரும்பிக்கறா தேவி.
இல்லங்க.. இந்த வேஷ்டியை எங்கே கட்டலாம்னு பார்த்துகிட்டு இருக்கேன்னு சொல்றான் மாயன். அதை கதவை சாத்திக்கிட்டு கட்டக் கூடாதான்னு கேட்கிறாள் தேவி. எதுக்குங்க கதவை சாத்திக்கிட்டு வேஷ்டியை கட்டணும்னு கேட்டுட்டு, திரும்ப, தேவி முகத்தை திருப்பிகிட்டு நிற்பதைப் பார்த்து பலமா சிரிக்கறான்.
அட... நீங்க பப்பி ஷேம்னு நினைச்சீங்களா? நான் வேஷ்டி கட்டி இருக்கேன்ங்க... இந்த வேஷ்டியை எங்கே கட்றதுன்னுதான் யோசிச்சுகிட்டு இருக்கேன்னு சொல்றான்.இந்த வேஷ்டிக்கு என்ன என்று தேவி கேட்க, இது நம்ம கல்யாண வேஷ்டிங்க என்று வெட்கப்படுகிறான் மாயன்.
வேஷ்டி எதுக்குடா?
இப்போ எதுக்குடா வேஷ்டியை வச்சுக்கிட்டு நிக்கறேன்னு தேவி கேட்கிறாள், ஏங்க அரவிந்துக்கும் தாமரைக்கும் கல்யாணம் ஆயிருச்சு. ரெண்டு பேரும் இனி சந்தோஷமா இருப்பாங்க. நாமும் இனி சந்தோஷமா வாழ்ந்து குழந்தை பெத்துக்கணும்ங்க...அந்த குழந்தைக்கு தொட்டில் கட்டிப் போடத்தாங்க இந்த வேஷ்டின்னு சொல்றான்.
தொட்டில் பேபி
வேஷ்டியை தொட்டில் கட்ட இடம் எல்லாம் பார்த்து வச்சுட்டேங்க.. அதுக்கு ஒரு பேபியை ரெடி பண்ண வேணாமான்னு மாயன் கேட்கிறான். ம்ம் ஆமாம் என்கிறாள் தேவி. அப்போ ஃபர்ஸ்ட் நைட் நடக்கணும்ங்க என்று மறுபடியும் அவள் தோளில் சாய்ந்து கொஞ்சுகிறான். ஆமாம்..என்று தேவி சொல்ல, நடக்குமாங்க என்று கேட்கிறான். ம்ம் நடக்கும் என்று மறுபடியும் சொல்கிறாள் தேவி.
இன்னிக்கு ராத்திரி
அப்போ இன்னிக்கு ராத்திரி ஃபர்ஸ்ட் நைட் வச்சுக்கலாமாங்கன்னு மாயன் கேட்க,தேவி என்று உள்ளிருந்து அம்மா கூப்பிட்றாங்க. இதோ வந்துட்டேன்மான்னு தேவி கிளம்ப... ஏங்க.. கூப்பிட்டவுடனே போகணும்னு அவசியம் இல்லைங்க... கொஞ்ச நேரம் கழிச்சுக்கூட போகலாம்னு மாயன் சொல்லியும், தேவி அவனைத் தள்ளிவிட்டு சென்றுவிட்டாள்.
ஏதாவது நடக்கும்னு
ஏதாவது நடக்கும்னு பார்த்தா கரடி மாதிரி யாராவது வந்து கெடுத்துடறாங்க.. இந்த வேஷ்டியும் பழசாயிரும் போல இருக்கு.. என்னங்க.. என்னங்க,, வேஷ்டி, ஃபர்ஸ்ட் நைட்டுன்னு சொல்லிகிட்டே ஏமாற்றத்தில் மாயன் நிற்கிறான். இது வழக்கமா சீரியல் பார்க்கறவங்களுக்கு ஏமாற்றம் எல்லாம் இல்லை. இதுதான் வழக்கம். பார்த்துக்கலாம் விடுங்க மாயன்.. இன்னும் எத்தனை எபிசோட் இப்படி ஏமாற வேண்டி இருக்கு...!