Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
Naam Iruvar Namakku Iruvar serial: கதவை சாத்திக்கிட்டு எதுக்குங்க வேஷ்டி கட்டணும்?
சென்னை: தேவி ரூமுக்குள் என்ட்ரி.. மாயன் இடுப்பில் வேஷ்டியை மறைச்சு நின்னுகிட்டு, எங்கே கட்டலாம் எங்கே கட்டலாம்னு மேலே பார்த்துகிட்டு நிக்கறான். ஏய்..சீச்சீ...என்னடா பண்றேன்னு கேட்டுகிட்டே அந்தப் பக்கமா திரும்பிக்கறா தேவி.
இல்லங்க.. இந்த வேஷ்டியை எங்கே கட்டலாம்னு பார்த்துகிட்டு இருக்கேன்னு சொல்றான் மாயன். அதை கதவை சாத்திக்கிட்டு கட்டக் கூடாதான்னு கேட்கிறாள் தேவி. எதுக்குங்க கதவை சாத்திக்கிட்டு வேஷ்டியை கட்டணும்னு கேட்டுட்டு, திரும்ப, தேவி முகத்தை திருப்பிகிட்டு நிற்பதைப் பார்த்து பலமா சிரிக்கறான்.
அட... நீங்க பப்பி ஷேம்னு நினைச்சீங்களா? நான் வேஷ்டி கட்டி இருக்கேன்ங்க... இந்த வேஷ்டியை எங்கே கட்றதுன்னுதான் யோசிச்சுகிட்டு இருக்கேன்னு சொல்றான்.இந்த வேஷ்டிக்கு என்ன என்று தேவி கேட்க, இது நம்ம கல்யாண வேஷ்டிங்க என்று வெட்கப்படுகிறான் மாயன்.
வேஷ்டி எதுக்குடா?
இப்போ எதுக்குடா வேஷ்டியை வச்சுக்கிட்டு நிக்கறேன்னு தேவி கேட்கிறாள், ஏங்க அரவிந்துக்கும் தாமரைக்கும் கல்யாணம் ஆயிருச்சு. ரெண்டு பேரும் இனி சந்தோஷமா இருப்பாங்க. நாமும் இனி சந்தோஷமா வாழ்ந்து குழந்தை பெத்துக்கணும்ங்க...அந்த குழந்தைக்கு தொட்டில் கட்டிப் போடத்தாங்க இந்த வேஷ்டின்னு சொல்றான்.
தொட்டில் பேபி
வேஷ்டியை தொட்டில் கட்ட இடம் எல்லாம் பார்த்து வச்சுட்டேங்க.. அதுக்கு ஒரு பேபியை ரெடி பண்ண வேணாமான்னு மாயன் கேட்கிறான். ம்ம் ஆமாம் என்கிறாள் தேவி. அப்போ ஃபர்ஸ்ட் நைட் நடக்கணும்ங்க என்று மறுபடியும் அவள் தோளில் சாய்ந்து கொஞ்சுகிறான். ஆமாம்..என்று தேவி சொல்ல, நடக்குமாங்க என்று கேட்கிறான். ம்ம் நடக்கும் என்று மறுபடியும் சொல்கிறாள் தேவி.
இன்னிக்கு ராத்திரி
அப்போ இன்னிக்கு ராத்திரி ஃபர்ஸ்ட் நைட் வச்சுக்கலாமாங்கன்னு மாயன் கேட்க,தேவி என்று உள்ளிருந்து அம்மா கூப்பிட்றாங்க. இதோ வந்துட்டேன்மான்னு தேவி கிளம்ப... ஏங்க.. கூப்பிட்டவுடனே போகணும்னு அவசியம் இல்லைங்க... கொஞ்ச நேரம் கழிச்சுக்கூட போகலாம்னு மாயன் சொல்லியும், தேவி அவனைத் தள்ளிவிட்டு சென்றுவிட்டாள்.
ஏதாவது நடக்கும்னு
ஏதாவது நடக்கும்னு பார்த்தா கரடி மாதிரி யாராவது வந்து கெடுத்துடறாங்க.. இந்த வேஷ்டியும் பழசாயிரும் போல இருக்கு.. என்னங்க.. என்னங்க,, வேஷ்டி, ஃபர்ஸ்ட் நைட்டுன்னு சொல்லிகிட்டே ஏமாற்றத்தில் மாயன் நிற்கிறான். இது வழக்கமா சீரியல் பார்க்கறவங்களுக்கு ஏமாற்றம் எல்லாம் இல்லை. இதுதான் வழக்கம். பார்த்துக்கலாம் விடுங்க மாயன்.. இன்னும் எத்தனை எபிசோட் இப்படி ஏமாற வேண்டி இருக்கு...!