Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜெயா டிவியில் புதிய கேம் ஷோ ஹவுஸ்புல்!
தமிழகம் மட்டுமின்றி உலக மக்கள் யாவரும் பயன் பெறும் வகையில் நேரடியாக ஒளிபரப்பாகும் இந்த கேம்ஷோவில் வீட்டிலிருந்தபடியே முற்றிலும் எஸ்.எம்.எஸ். முறையை பயன்படுத்தி விளையாடலாம்.
நேயர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜெயா டிவியின் நிகழ்ச்சிகளுக்கிடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில்களை எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்ப வேண்டும். அதைத்தொடர்ந்து "ஹவுஸ்புல்'' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 15 எண்களை கொண்ட ஒரு குறுந்தகவல் பட்டியல் அவர்களது செல்போனுக்கு அனுப்பப்படும். இந்த எண்களை வைத்து இந்நிகழ்ச்சியில் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலமாக பங்கேற்கலாம்.
இதில் ஒரு கோடி ரூபாய் வரை பரிசுகள் வெல்ல வாய்ப்பு உள்ளது. முதல் இடத்தைப் பிடிக்கும் வெற்றியாளருக்கு ஒரு கோடி மதிப்பிலான வீடு பரிசாக காத்திருக்கிறது. இந்த சுவாரஸ்யமான புத்தம் புது நிகழ்ச்சி திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.