Just In
- 20 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 34 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 40 min ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 2 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
Don't Miss!
- Sports
ரெய்னாவுக்கு இந்த நிலைமையா? சிஎஸ்கே மட்டுமில்லை.. மற்ற அணிகளும் ஏலம் கேட்க தயக்கம்.. பரபர தகவல்!
- Lifestyle
நீங்க தினமும் குடிக்கிற இந்த பானங்களாலதான் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வருதாம் தெரியுமா?
- News
அது பாட்டுக்கு போகுது.. பெருமாளை கும்பிட வந்த பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்.. திருப்பதியில்..!
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை.. பரபரக்க வைத்த அபிராமி.. சிக்கிக்கொண்ட மதுமிதா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் பங்கேற்றுள்ள அபிராமி தனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை என தண்ணீர் பாட்டீலை பாவித்ததால் பிக்பாஸ் வீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் பல்வேறு பிரச்சனைகள், சுவாரசிய சம்பவங்கள், சென்டிமென்ட் சீன்கள் என களைகட்டியது. முதலில் கவினை காதலிப்பதாக கூறினார் அபிராமி.
ஆனால் அவரது காதலை கவின் ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் தனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை என ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்து குடும்பம் நடத்தி வந்தார்.

முகெனுக்கும் அபிக்கும் பிறந்த குழந்தை
இந்நிலையில் நேற்று ஹவுஸ் மேட்ஸ்களை சந்தித்த கமல்ஹாசன், கடந்த வாரம் நடந்த சம்பவங்களை செய்தியாக வாசிக்குமாறு ஃபாத்திமாபாபுவிடம் கூறினார். இதைத்தொடர்ந்து செய்தி வாசித்த அவர், முகெனுக்கும் அபிராமிக்கும் குழந்தை பிறந்த சம்பவத்தை கூறினார்.

பெயர் கெட்டுப்போகும்
பின்னர் இதுகுறித்து ஃபாத்திமா பாபுவிடம் கேட்ட மதுமிதா, நான்தான் ஏற்கனவே அதை சொல்லவேண்டாம் என்றேனே ஏன் கூறினீர்கள் என்றார். அந்த விஷயத்தால் அபிராமியின் பெயர்தான் கெட்டுப்போகும் என்றார்.

அறைந்துவிடுவேன்
இதில் ஒன்றும் தவறு இல்லை என்ற ஷெரின், சாக்ஷி, அபிராமி, வனிதா ஆகியோர் ஒன்றுகூடி மதுமிதாவை ஒரு வழியாக்கிவிட்டனர். அபிராமி யாருக்கும் தெரியாத வகையில் மதுமிதாவை அறைந்து விடுவேன் என்றார்.

வரிந்து கட்டிய ஹவுஸ் மேட்ஸ்
குடும்பத்தினர் ஒன்றாக கூடி கும்மியடித்ததால் நொந்துபோன மதுமிதா தான் ஒரு தமிழ்பெண் தனக்கு பிடிக்கவில்லை என்றார். அவ்வளவுதான், ஷெரின், சாக்ஷி, அபிராமி, வனிதா, கவின், சாண்டி என அனைவரும் வரிந்துக் கட்டிக்கொண்டு வந்து மிதுமிதாவை ஒரு கை பார்த்துவிட்டனர்.

சிக்கிய மதுமிதா
அபிராமி முகெனுக்கு போட்ட பிட்டில் வசமாக சிக்கிக்கொண்டார் மதுமிதா. மதுமிதா இதுவரை யார் குறித்தும் புரணி பேசியதாக தெரியவில்லை . அதேபோல் வெட்டி சண்டையும் போட்டதாக தெரியவில்லை.

கோபம் இல்லை
ஆனால் நேற்று அவர் தமிழ்பெண் என்று கூறிய வார்த்தை மட்டும் சற்று நெருடலை ஏற்படுத்தியுள்ளதை தவிர மதுமிதாவின் மீது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தவில்லை என தெரிகிறது.