Don't Miss!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எனக்கு 'அந்த' திறமை எல்லாம் இல்லை: ஒப்புக் கொண்ட நடிகை சாதனா
சென்னை: அரசியலில் இருக்க தனித்திறமை வேண்டும். அது எனக்கு இல்லை என நடிகை சாதனா தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் ஹீரோயின் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் சாதனா. தற்போது அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நடிப்பு மற்றும் அரசியல் பற்றி கூறுகையில்,
டிவி தொடர்கள்
நான் தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் தமிழ் படங்களில் நடிக்க ஆவலாக உள்ளேன்.
இந்தி தொடர்கள்
டப் செய்யப்படும் தொலைக்காட்சி தொடர்களால் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் பிற மொழி தொலைக்காட்சி தொடர்களை தமிழில் டப் செய்யக் கூடாது.
தவறுகள்
தொலைக்காட்சி தொடர்களை பார்த்து தான் பலரும் தவறு செய்கிறார்கள். தவறுகள் அதிகரிக்க தொலைக்காட்சி தொடர்கள் காரணம் என்று கூறுகிறார்கள். இதில் உண்மை இல்லை.
அரசியல்
அரசியல் பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. அதற்கு தனித்திறமை வேண்டும். எனக்கு அந்த திறமை இல்லை என நடிகை சாதனா தெரிவித்துள்ளார்.