Don't Miss!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- News இதுக்கு எதுக்கு தட்கலில் டிக்கெட் புக் பண்ண வேண்டும்? ஏசி 2ம் வகுப்பு பெட்டியிலேயே இதுதான் நிலைமை
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இதுக்கு எனக்கு தகுதி இருக்கான்னு தெரியலையே: ஃபீல் பண்ணிய ஓவியா
சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஓவியா பிக் பாஸ் பற்றி பேசி ஃபீல் பண்ணியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கும் பிரபலமானவர் ஓவியா. இந்த சீசனில் கலந்து கொண்டவர்களில் யாருக்கும் ஓவியா போன்று ஆதரவு கிடைக்கவில்லை.
ஓவியாவுக்கு கிடைத்த ஆதரவை பார்த்து தான் பலருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆசையே வந்தது.
ஓவியா
மன அழுத்தம் ஏற்பட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்ற ஓவியாவுக்கு இன்றளவும் ரசிகர்கள் அதிகம். முதல் சீசன் போட்டியாளர்கள் பிக் பாஸ் 2 வீட்டிற்கு விருந்தினர்களாக வந்துள்ள நிலையில் ஓவியா வந்தால் நன்றாக இருக்கும் என்று பார்வையாளர்கள் நினைக்கிறார்கள். ஆரவ் வந்ததை பார்த்த பார்வையாளர்கள் ஓவியாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்கள்.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியை விளம்பரம் செய்ய அவர்களுக்கு ஓவியா தேவைப்பட்டார். முதல் நாள் வந்த வேகத்தில் கிளம்பிவிட்டார் ஓவியா. தற்போது அவர் மீண்டும் வந்து சில நாட்கள் தங்கியிருந்தால் நன்றாக இருக்கும் என்று பார்வையாளர்கள் விரும்புகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆரவும், ஓவியாவும் ஒன்றாக வெளிநாட்டிற்கு செல்லும் அளவுக்கு நெருங்கிவிட்டார்கள். அதனால் ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இந்த நேரம் ஓவியா வந்தால் காதல் கைகூடிவிடும் என்பது எதிர்பார்ப்பு.
ஆதரவு
இலங்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஓவியா, தனக்கு பிக் பாஸ் மூலம் பெரிய ரசிகர் பட்டாளமே கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு கிடைத்துள்ள இந்த அன்புக்கும், ஆதரவுக்கும் தான் தகுதி உடையவரா என்று தெரியவில்லை என்றார் ஓவியா. ரசிகர்களின் அமோக ஆதரவை பெற தான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாக பெருமைப்பட்டார் ஓவியா.
மாற்றம்
பிக் பாஸுக்கு முன்பும், பின்பும் வாழ்க்கையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வெளியே சென்றால் யாருக்கும் என்னை தெரியாது. ஆனால் தற்போது என்னை அடையாளம் கண்டு என்னிடம் வந்து பேசுகிறார்கள். மக்களின் இந்த அன்புக்கு நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓவியா கூறினார்.
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!