twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வில்லத்தனம் செய்ய எனக்குப் பிடிக்கும்: நீலிமாராணி

    By Mayura Akilan
    |

    Neelima
    தொலைக்காட்சித் தொடர்களில் அழகாய், வில்லத்தனமாய், அமைதியாய் நடித்து வருபவர் நீலிமாராணி. சினிமாவிலும் நடித்து பெயரெடுத்திருக்கிறார். அன்பாய் நடிப்பதை விட வில்லியாய் நடிப்பதே பிடித்திருக்கிறது என்று கூறுகிறார் நீலிமா.

    கோலங்கள் தொடரில் ஆரம்பித்த வில்லத்தனம் தென்றலில் தொடர்ந்தது. ஆனால் அழுகை அமுதாவாக செல்லமே தொடரில் நடிப்பதும் வித்தியாசமான அனுபவம்தான் என்கிறார் நீலிமாராணி.

    ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்ட கதைகள்தான்; பார்த்த முகங்கள்தான் என்றாலும் சீரியல்களில் ஏதோ ஒரு விஷயம் நாளுக்கு நாள் புதுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. படித்தவர்களும் தொழில் நுட்பம் தெரிந்தவர்களும் சீரியலுக்கு வந்ததுதான் அதற்கு காரணம்.

    இப்போ நிறைய பேர் சீரியல்களை பார்க்க ஆரம்பித்து விட்டனர். காரணம், காமெடி சேனல் என்ற பெயரில் விவேக்கையும் வடிவேலையும் மாற்றி மாற்றி காட்டுகிறார்கள். அது பலருக்கு பிடிக்கவில்லை. அதிலிருந்து நேயர்களை விடுவித்து ரிலாக்ஸ் கொடுப்பது சீரியல்கள்தான்.

    சீரியல்களில் பெண்களையே முன்னிலைப்படுத்த காரணம் சீரியலுக்கு பெண்கள் ரசிகைகளாக இருப்பதுதான். பெண்களுக்கு பெண்கள்தான் வில்லியாக இருக்க முடியும். அதனால்தான் சீரியல்களில் வில்லி கேரக்டர்கள் பெண்களால் ரசிக்கப்படுகின்றன. பாசமுள்ள அம்மா, அன்பான மனைவி, அருமையான காதலி போன்ற கேரக்டர்கள் கொடுக்காத அதிர்வுகளை வில்லி கதாபாத்திரம் மட்டுமே கொடுக்கிறது. அதனால் சீரியல்களில் என் சாய்ஸ் வில்லிதான்'' என்றார் நீலிமா ராணி.

    சினிமாவில் திமிரு, "நியூட்டனின் 3-ம் விதி', "ராஜாதிராஜா' படங்களும் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கின்றன. மேலும் "ஜக்குபாய்', "புகைப்படம்', "ரசிக்கும் சீமானே' ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். 'விதை' என்ற ஈழம் தொடர்பான படத்தில் நடித்திருக்கிறேன்.

    ஏற்கனவே ஆணிவேர் படத்துல நடிச்சேன். இதில் என் நடிப்பைப் பார்த்துட்டு லண்டனில் வசிக்கும் ஒரு ஈழத் தமிழர் குடும்பம் நேர்ல சந்திச்சாங்க. உடைஞ்ச குரல்ல என்னை அவங்க மகளா நினைச்சுப் பேசினது ரொம்பவே பாதிச்சது. அந்த அன்புதான் இப்ப மறுபடியும் ஈழம் தொடர்பான படத்துல நடிக்க தூண்டுதல். எத்தனையோ சினிமாவில் நடித்தாலும் சீரியலில் நடிப்பதுதான் எனக்கு திருப்தியாக இருக்கிறது என்று கூறி விடைபெற்றார் நீலிமாராணி.

    English summary
    Neelima is a film actress who began her career acting in movies and serials.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X