Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிக் பாஸ் வீட்டில் தினம் தினம் அழும் சென்றாயன்: காரணம் யார் தெரியுமா?
சென்னை: தான் தினம் தினம் அழுவதாக கமல் ஹாஸனிடம் தெரிவித்துள்ளார் சென்றாயன்.
அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யா சென்றாயன் ஏமாற்றி காரியம் சாதித்தார். சென்றாயனிடம் பொய் சொல்லி அவர் தலைமுடிக்கு சிவப்பு கலர் அடித்துவிட்டார் ஐஸ்வர்யா.
ஏமாந்து போனாலும் ஐஸ்வர்யா மீது கோபம் காட்டவில்லை சென்றாயன்.
முடி
ஹேர் கலர் செய்த பிறகு சென்றாயனின் முடி வித்தியாசமாக பரட்டையாக உள்ளது. கலர் செய்த பிறகு முடி கொட்டுகிறதாம். இதனால் தினம் தினம் அழுவதாக சென்றாயன் கமல் ஹாஸனிடம் தெரிவித்தார். ஆனால் கமல் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏமாற்றிய ஐஸ்வர்யாவோ என்னை மாதிரி நல்லவர் உண்டோ என்பது போன்று பாவமாக உட்கார்ந்திருந்தார்.
ரித்விகா
ரித்விகா தன் கையில் உள்ள டாட்டூவை கமலிடம் காண்பித்தார். இது தான் முதல் முறையா நீங்க டாட்டூ போடுவது என்று கமல் கேட்டார். இல்லை இது இரண்டாவது முறை என்று பதில் அளித்தார் ரித்விகா. முதல் முறையும் இப்படித் தான் அழுதீர்களா என்று கேட்டு கமல் சிரித்தார். ரித்விகா டாட்டூ குத்தியது பலவகையான விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது. முக்கியமாக பலரும் அவரை தான் கிண்டல் செய்கிறார்கள்.
ஜனனி
புருவத்தை ப்ளீச் செய்த பிறகு முகமே மாறிவிட்டதாக ஃபீல் பண்ணினேன் என்று ஜனனி கமலிடம் தெரிவித்தார். தாடி பாலாஜியும் தனக்கே தன்னை அடையாளம் தெரியவில்லை என்றார். பதிலுக்கு கமல், இப்போ ஏசி நல்லா சில்லுன்னு குளிருமே என்று கூறி சிரித்தார். இருப்பதிலேயே தனது டாஸ்க் தான் கஷ்டம் என்று கமலிடம் கூறினார் ஐஸ்வர்யா. மும்தாஜை விட்டு முடி வெட்ட வைத்திருக்கணும், ப்ரொபஷனல் வந்ததற்கே இந்த கூப்பாடா?
யாஷிகா
சேலை உடுத்தி மேக்கப் போடாமல் இருக்கும் யாஷிகாவை பார்த்தால் இந்த பொண்ணு தான் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்ததா என்ற கேள்வி எழுகிறது. மேக்கப் இல்லாமல் ஆளே வித்தியாசமாக உள்ளார். சேலை உடுத்தி நடக்கத் தெரியாத தனக்கு இந்த டாஸ்க் கொடுத்துவிட்டாரே பிக் பாஸ் என்று ஃபீல் பண்ணியுள்ளார் யாஷிகா.
கஷ்டம்
பிக் பாஸ் இந்த வாரம் கஷ்டமான டாஸ்க் கொடுத்துவிட்டதாக நினைக்கிறீர்களா என்று கமல் கேட்டார். அதற்கு டாஸ்க் செய்யாத மும்தாஜ் முதல் ஆளாக ஆமாம் என்றார். ஆனால் அவர் கூறியதை கமல் காதில் வாங்கவே இல்லை. டாஸ்க் கொடுத்தால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லும் மும்தாஜை கடிந்து கொண்டார் கமல்.