Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பச்ச பச்சையா கேட்பேன்.. அசிங்க அசிங்கமா பேசுவேன்.. என்னை பத்தி உங்களுக்கு தெரியல.. மிரட்டிய மீரா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா நான் பச்சை பச்சை கேட்பேன் அசிங்க அசிங்கமாக பேசுவேன் ஆக்ரோஷமாக பேசியது மிரள வைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வனிதா வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் இருந்த வனிதாவுக்கு மக்கள் மிகக் குறைந்த வாக்குகளை அளித்ததால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டில் தனக்கென ஒரு கேங்கை உருவாக்கிக் கொண்டு சிலரை குறி வைத்து சண்டை போட்டு வந்தார் வனிதா. வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அவர் குறித்து ஹவுஸ் மேட்ஸ்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
சண்டை போட ஆள் இல்லை
லிவிங் ஏரியாவில் கவின், சரவணன், சாண்டி, மீரா ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எவ்வளவு டஃப் ஆன கன்டெஸ்டன்ட்டை இப்படி தூக்கிவிட்டார்களே என்றார் கவின். மேலும் இப்போது சண்டை போட ஆள் இல்லை என்றும் கூறினார் கவின்
நீயெல்லாம் ஓடிவிடுவாய்
அதற்கு பதிலளித்த மீரா அதான் நான் இருக்கேனே என்னிடம் சண்டைபோடுங்கள் என்றார். அப்போது கவின் நீயெல்லாம் சண்டை என்று வந்தால் பத்து பாயிண்ட் பேசுவதற்குள் இடத்தை விட்டு கிளம்பி விடுவாய்.
மற்றவர்களை ஓடவிடுவார்
ஆனால் வனிதா அக்கா கடைசி வரை நின்று சண்டை போடுவார். அவருக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது என்கிறார் கவின். மேலும் வனிதா மற்றவர்களை தான் ஓட விடுவார். அவர் எப்போதும் ஓடியதில்லை என்றார்.
அசிங்க அசிங்கமாக கேட்பேன்
உடனே ஆக்ரோஷமான மீரா, என்னை பற்றி உங்களுக்கு தெரியாது. நான் பச்ச பச்சையாக கேட்பேன், அசிங்க அசிங்கமாக கேட்பேன், நாக்க புடுங்கிக்கிட்டு சாகுற மாதிரி ஒவ்வொரு கேள்வியும் கேட்பேன் என ஆக்ரோஷமாக பேசினார் மீரா.
மிரட்டிய மீரா
யாரை கேட்பாய் என கவின் கேட்க, என்னை யாரெல்லாம் பேசுகிறார்களோ அவர்களை பச்சை பச்சையாக பேசுவேன். வயசு வித்தியாசம் இல்லாமல் பேசுவேன் என்று மிரட்டும் வகையில் கூறினார் மீரா.
சேரனுடன் பிரச்சனை
மீரா அப்படி பேசியது சேரனை என தெரிகிறது. ஏனெனில் சேரனுடன்தான் மீராவுக்கு அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வயசு வித்தியாசம் இல்லாமல் அசிங்க அசிங்கமாக பேசுவேன் என்று சேரனை குறிப்பிட்டே மீரா பேசியதாக தெரிகிறது.