Don't Miss!
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- News 17 தொகுதிகளில் 20% ஓட்டுகளை தாண்டும் பாஜக.. எந்தெந்த இடங்கள் தெரியுமா? தந்தி டிவி கருத்து கணிப்பு
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
பச்ச பச்சையா கேட்பேன்.. அசிங்க அசிங்கமா பேசுவேன்.. என்னை பத்தி உங்களுக்கு தெரியல.. மிரட்டிய மீரா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா நான் பச்சை பச்சை கேட்பேன் அசிங்க அசிங்கமாக பேசுவேன் ஆக்ரோஷமாக பேசியது மிரள வைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வனிதா வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் இருந்த வனிதாவுக்கு மக்கள் மிகக் குறைந்த வாக்குகளை அளித்ததால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டில் தனக்கென ஒரு கேங்கை உருவாக்கிக் கொண்டு சிலரை குறி வைத்து சண்டை போட்டு வந்தார் வனிதா. வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அவர் குறித்து ஹவுஸ் மேட்ஸ்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
சண்டை போட ஆள் இல்லை
லிவிங் ஏரியாவில் கவின், சரவணன், சாண்டி, மீரா ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எவ்வளவு டஃப் ஆன கன்டெஸ்டன்ட்டை இப்படி தூக்கிவிட்டார்களே என்றார் கவின். மேலும் இப்போது சண்டை போட ஆள் இல்லை என்றும் கூறினார் கவின்
நீயெல்லாம் ஓடிவிடுவாய்
அதற்கு பதிலளித்த மீரா அதான் நான் இருக்கேனே என்னிடம் சண்டைபோடுங்கள் என்றார். அப்போது கவின் நீயெல்லாம் சண்டை என்று வந்தால் பத்து பாயிண்ட் பேசுவதற்குள் இடத்தை விட்டு கிளம்பி விடுவாய்.
மற்றவர்களை ஓடவிடுவார்
ஆனால் வனிதா அக்கா கடைசி வரை நின்று சண்டை போடுவார். அவருக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது என்கிறார் கவின். மேலும் வனிதா மற்றவர்களை தான் ஓட விடுவார். அவர் எப்போதும் ஓடியதில்லை என்றார்.
அசிங்க அசிங்கமாக கேட்பேன்
உடனே ஆக்ரோஷமான மீரா, என்னை பற்றி உங்களுக்கு தெரியாது. நான் பச்ச பச்சையாக கேட்பேன், அசிங்க அசிங்கமாக கேட்பேன், நாக்க புடுங்கிக்கிட்டு சாகுற மாதிரி ஒவ்வொரு கேள்வியும் கேட்பேன் என ஆக்ரோஷமாக பேசினார் மீரா.
மிரட்டிய மீரா
யாரை கேட்பாய் என கவின் கேட்க, என்னை யாரெல்லாம் பேசுகிறார்களோ அவர்களை பச்சை பச்சையாக பேசுவேன். வயசு வித்தியாசம் இல்லாமல் பேசுவேன் என்று மிரட்டும் வகையில் கூறினார் மீரா.
சேரனுடன் பிரச்சனை
மீரா அப்படி பேசியது சேரனை என தெரிகிறது. ஏனெனில் சேரனுடன்தான் மீராவுக்கு அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வயசு வித்தியாசம் இல்லாமல் அசிங்க அசிங்கமாக பேசுவேன் என்று சேரனை குறிப்பிட்டே மீரா பேசியதாக தெரிகிறது.