ஸ்ரீ சங்கரா டிவியில் ‘பலே இந்தியா’ சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சி
இந்திய சுதந்திர தினத்தின சிறப்பு நிகழ்ச்சியாக ஸ்ரீ சங்கரா டிவியில் பலே இந்தியா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
தேசபக்தியும், நாட்டுப் பற்றும் கொண்ட தலைவர்கள் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர். அத்தகைய தியாகிகளை நினைவு கூறும் வகையில் இந்திய சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது ஸ்ரீ சங்கரா டிவி.
ஒவ்வொரு துறையிலும் நேர்மையான முறையில் சாதனை படைத்த தலைவர்களை பேட்டி கண்டு ஒளிபரப்புகிறது ஸ்ரீ சங்கரா டிவி.

முன்னேறும் இந்தியா
பசுமை புரட்சி, சந்திராயன் சாதனை, மென்பொருள் ஆராய்ச்சி, என பல துறைகளில் நம்நாடு முன்னேறியுள்ளது. பொருளாதார வல்லரசாக நாடு பெருமிதத்தோடு முன்னேறி வருகிறது.

சாதனை விஐபிக்கள்
நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே, விண்வெளி அறிவியல் விஞ்ஞானி ரொட்டம் நரசிம்மா, நீதியரசர் வெங்கடசலய்யா, டாக்டர் தர்சன் சங்கர், டாக்டர் சுதாசன் ஆகியோர் இந்திய சுதந்திரம் பற்றி தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

காலை நேரத்தில்…
ஆகஸ்ட் 15ம் தேதி காலை நேரத்தில் 8 மணிமுதல் 10 மணிவரை இந்த மிகப்பெரிய விஐபிக்களின் பேட்டி ஒளிபரப்பாக உள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி
இதேபோல மாணவர்கள்,பொதுமக்கள், ஆகியோரிடம் இந்திய சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலேஇந்தியா அமையும் என்கின்றனர் ஸ்ரீ சங்கரா டிவி குழுவினர்.


Click it and Unblock the Notifications











